Advertisment

NEET Counselling: 2024 முதல் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே கவுன்சிலிங் – மருத்துவ கவுன்சில் திட்டம்

NEET 2023: எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; நாடு முழுவதும் பொதுவான கவுன்சிலிங் நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

(பிரதிநிதித்துவ படம்)

அடுத்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG 2023) முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூலை மாதம் கவுன்சிலிங் தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்: NEET Counselling 2023: நீட் கவுன்சலிங்கை இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம்

பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023ன் கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே கவுன்சிலிங் நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அரசிதழில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் பொதுவான கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கின்றன.

இருப்பினும், விஷயம் அறிந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, இது தொடர்பாக இன்னும் முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதால், தற்போதைய மாணவர்களுக்கு பொது கலந்தாய்வு நடக்காது.

“பொதுவான கவுன்சிலிங் நடத்துவதற்கு ஒரு புதிய மென்பொருள் தேவைப்படும். இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது தவிர, முழு கவுன்சிலிங் செயல்முறையையும் ஒரே மேடையில் கொண்டு வர மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே உரையாடல் நடந்து வருகிறது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

தற்போது, ​​15 சதவீத எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கவுன்சிலிங்கை மத்திய அரசு நடத்துகிறது, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அதிகார அமைப்பு அந்தந்த மாநிலங்களில் கவுன்சிலிங்கை நடத்துகின்றன. 50 சதவீத முதுநிலை இடங்களுக்கான கவுன்சிலிங் மத்திய ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

"மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நடவடிக்கை என்பதால் மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. தற்போது, ​​மாணவர்கள் மத்திய மற்றும் மாநில கவுன்சிலிங்கிற்கு தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும், அவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி கட்டணம் செலுத்தி, நேரடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும். அதேநேரம் ஒரே போர்ட்டலில் நாடு முழுவதும் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதை பொதுவான கவுன்சிலிங் உறுதி செய்யும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment