Advertisment

பாம்புகள், பாம்பு கடி தொடர்பான சிகிச்சை பற்றிய புதிய பட்டய படிப்பு அறிமுகம்: முழு விவரம் உள்ளே

பாம்புகள் மற்றும் பாம்புகடிகளின் விஷம், அதன் சிகிச்சை முறைகள் குறித்த புதிய பட்டய படிப்பை கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதிய பட்டய படிப்பு

புதிய பட்டய படிப்பு

பாம்புகள் மற்றும் பாம்புகடிகளின் விஷம், அதன் சிகிச்சை முறைகள் குறித்த புதிய பட்டய படிப்பை கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷங்களை பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று துவங்கபட்டது, இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய லண்டன் ரேடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி கூறியதாவது இங்கிலாந்தில் உள்ள ரேடிங் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

publive-image

இந்த படிப்பில் விஷம்  பற்றியும், அவைகளின் தன்மை பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக படிப்பார்கள், மேலும் பாம்புகளின் விஷம், முதுகெலும்பு இல்லாத ஊர்வனவைகளான பூரான், சிலந்தி, தேள்களின் விஷம் குறித்து விரிவாக படிப்பார்கள்.

மேலும் தாவரங்களில் உள்ள , விஷங்கள், அவற்றின் விளைவுகள் பற்றியும் படிப்பார்கள், முப்கியமாக விஷக்கடிகளுக்கு  எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள், என்பது  பற்றியும்  மற்றும், உயிரை கொள்ள கூடிய விஷத்தை மருந்துகளாக  பயண்படுத்துவது, குறித்தும் விரிவாக படிப்பார்கள், இந்த படிப்பானது 10 வாரங்களுக்குள் முடிக்கப்படும்.

அவ்வாறு முடித்த மாணவ மாணவிகளுக்கு, இதற்கான சான்றிதழ்கள் வழங்கபடும்.அதனை வைத்து மாணவர்கள் விஷங்களை பற்றிய ஆராய்ச்சியிலும், பெரியமருந்து  கம்பெனிகளிலும் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

publive-image

இந்த படிப்பில் சேர 12 வது முடித்து  இருந்தால் போதுமானது, இந்த  கல்லூரியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி, கோவையை சார்ந்த பொதுமக்கள், வேறு  கல்லூரிகளில் படிக்கும்  மாணவ மாணவிகளும்  சேர்ந்து கற்று  பயணடையலாம்.

வாரத்தில் ஒரு நாள், 2மணி நேரம் மட்டும் பயிற்சியளிக்கபடும், இதற்காக சிறப்பு பயிற்சி மையம் இங்கு அமைக்கபட்டுள்ளது.இதனை கோவையை சேர்ந்த அனைவரும் படிக்கலாம் என்று இவ்வாறு கூறினார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment