Advertisment

45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஓ.பி.சி பேராசிரியர்கள் எண்ணிக்கை 4% மட்டுமே

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் 5 துணைவேந்தர்கள் மட்டுமே ஓ.பி.சி.,க்கள்; பேராசிரியர்கள் 4%, இணைப் பேராசிரியர்கள் 6%; மத்திய அரசு தகவல்

author-image
WebDesk
New Update
teacher-class

தமிழகத்தில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களில் 1265 பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் காலி பணியிடங்கள்

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்களில் 4% பேரும், இணைப் பேராசிரியர்களில் 6% பேரும் மட்டுமே ஓ.பி.சி (OBC) வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் மக்களவையில் சமர்ப்பித்த தரவு காட்டுகிறது.

Advertisment

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பிரிவுகளின் பிரதிநிதித்துவம் குறித்து ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி சஞ்சீவ் குமார் சிங்காரி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுபாஸ் சர்க்கார், 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் 5 துணைவேந்தர்கள் மட்டுமே ஓ.பி.சி.,க்கள் என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: டாப் இன்ஜினியரிங் கல்லூரிகள்: ஐ.ஐ.டி மெட்ராஸின் 5 ஆண்டு தரவரிசை

பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பிரிவுகளில் OBC களின் பிரதிநிதித்துவம் SC களை விட குறைவாக உள்ளது. அதேநேரம் 85% பேராசிரியர்களும், 82% இணைப் பேராசிரியர்களும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர்களின் நுழைவு மட்டத்தில், OBC களின் பிரதிநிதித்துவம் சற்று சிறப்பாக உள்ளது, ஏனெனில் 18% ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 59% பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், ஓ.பி.சி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர் அல்லாத ஊழியர்களில் கூட, 12% மட்டுமே OBC களைச் சேர்ந்தவர்கள், அதே சமயம் 70% ஊழியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

“OBC காலியிடங்களை நிரப்ப தேசிய அளவில் தனி ஆட்சேர்ப்பு இயக்கம் இருக்க வேண்டும். அத்தகைய இயக்கம் நாடு முழுவதும் உள்ள OBC களில் இருந்து தகுதியான ஆசிரியர்களை ஈர்க்கும், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு தகுதியான பேராசிரியர்களின் தரவுத்தளத்தையும் உருவாக்க வேண்டும்,” என்று சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி தியாகராஜன் கூறினார்.

"கிரீமி லேயர் விதியால் தகுதியான OBC விண்ணப்பதாரர்கள் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. வருமான உச்சவரம்பை ஆண்டுக்கு 8 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும். குறைந்த வருமான உச்சவரம்பு அரசு ஊழியர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் அத்தகைய பதவிகளுக்கு விண்ணப்பிப்பதைத் தடுக்கிறது. கிரீமி லேயர் கான்செப்ட் அகற்றப்பட வேண்டும்,” என்று ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த கல்வியாளர் ஒருவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education University Obc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment