புதுவையில் ஆசிரியர் பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசின் கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கிவரும் புதுவை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான 2 ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் வருகிற 14-ந்தேதி முதல் நிரப்பப்பட உள்ளது.
இந்த பட்டய படிப்பில் சேர விரும்புவோர் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அல்லது அதற்கு சமமான தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் லாஸ்பேட்டை தொல்காப்பியர் வீதியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்துக்கு நேரில் வருகை தந்து சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“