Advertisment

புதுச்சேரி அரசில் மாற்று திறனாளிகளுக்கான யூ.டி.சி தேர்வு தேதி அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான மேல்நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்து தேர்வு இந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்; புதுச்சேரி அரசு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SSC

மாற்றுத் திறனாளிகளுக்கான மேல்நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்து தேர்வு இந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மேல்நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisment

புதுச்சேரி அரசு பணியாளர்கள் துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் செயலாளர் (பணியாளர் பிரிவு) ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;

இதையும் படியுங்கள்: தலித் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் புதுச்சேரி தனியார் பள்ளிகள்; கல்வி கட்டணக் குழுவில் வி.சி.க புகார்

மாற்றுத் திறனாளிகளுக்கான மேல்நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்து தேர்வு இந்த மாதம் 23 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 5 ஆகும். ஜூலை 5 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

தேர்வுக்கு உதவியாளரை பயன்படுத்த விரும்புபவர்கள் தேர்வு பிரிவு, டி.பி & ஏ.ஆர், தலைமை செயலகம், புதுச்சேரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது dpar-exam@py.gov.in என்ற மின்னஞ்சல் ஐ.டி மூலமாகவோ 05-07-2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கு சொந்தமாக உதவியாளரை ஏற்பாடு செய்துக் கொள்வது அனுமதிக்கப்படாது. நிலுவைத் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் துறை எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Exams Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment