/indian-express-tamil/media/media_files/2025/10/07/highways-jobs-2025-10-07-16-00-39.jpg)
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூர் நெடுஞ்சாலை வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் அல்லது இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 2 ஆண்டுகள் கனரக வாகனம் இயக்கிய அனுபவச் சான்று வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் எஸ்.டி, பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 19,500 – 71,900
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி: கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலை, க(ம)ப வட்டம், திருச்சி சாலை, கோயம்புத்தூர் - 641018
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.