IAS/IPS போன்ற அகில இந்திய குடிமைப் பணிகளில் சேர மத்திய தேர்வாணைக் குழு முதல் நிலைத் தேர்வுகளை (preliminary Examination) 31-o5-2020 -ல் நடத்தவுள்ளது.
இத்தேர்வுகளில் வெற்றி ஈட்ட, தமிழ் நாட்டை சேர்ந்த பட்டதாரி/முதுநிலை பட்டதாரிகட்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி, ஆறுமாத கால உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கவிருக்கிறது தமிழக அரசு. இப்பயிற்சி சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 'அகில இந்திய குடுமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில்' அளிக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு 13-10- 2019 அன்று தமிழகத்தில் இருபது மையங்களில் நடைபெறும்.
இணையதள வழி விண்ணப்பிக்க கடைசி நாள் 16-09-2019 (பிற்பகல் ஆறு மணி வரை) என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும், விவரங்களுக்கு https://civilservicecoaching.com என்ற இணையதளத்தை பின் தொடருங்கள்.