/indian-express-tamil/media/media_files/2024/11/11/V1HbOEl0Ut1AEO3MIDs7.jpg)
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வள்ளியூர், இராதாபுரம், நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், சிவகிரி, சங்கரன்கோவில் ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களிலும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஓய்வு பெற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள் உள்பட பல்வேறு வகைகளில் இந்தப் பணியிடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள்
கல்வித் தகுதி: எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுத் தகுதி: 18 மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம்: பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.750 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0413d63838ef1fb6f34ca2dc6821c6/uploads/2025/09/2025092936.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002
மின்னஞ்சல் முகவரி: dlsa1tirunelveli@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.