சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; ரூ.18,000 சம்பளம்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? என்பன உள்ளிட்ட முழுவிபரம் இங்கே

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; ரூ.18,000 சம்பளம்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? என்பன உள்ளிட்ட முழுவிபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tn govt jobs

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் உதவி அலகில் செயல்படும் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

வழக்குப் பணியாளர் (Case Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டாட்சியர் அலுவலக வளாகம், பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை - 606601

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Tiruvannamalai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: