Advertisment

TNEA Counselling; எஞ்ஜினீயரிங் கவுன்சலிங் ரவுண்ட் 3; எந்த கோர்ஸ் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்?

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் 3-ம் சுற்று; நல்ல கல்லூரியில் படிக்க எந்த கோர்ஸ் தேர்வு செய்ய வேண்டும்? எந்த படிப்புக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Counselling

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்று நாளை (ஆகஸ்ட் 22) தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்றில் இடங்கள் பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப்பெற்று வருகின்றனர். இதனையடுத்து 3 ஆம் சுற்று கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள்: TNEA Counselling: எஞ்ஜினீயரிங் கவுன்சலிங் ரவுண்ட் 3; இந்த டாப் கல்லூரிகளில் இன்னும் காலி இடங்கள் இருக்கு!

இந்தநிலையில், ரவுண்ட் 3 மாணவர்கள் எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கோர்ஸை தேர்வு செய்கிறார்களா அல்லது சமூக ஊடக தாக்கத்தின் காரணமாக தேர்வு செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோர் படிப்புகளான மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற கோர்ஸ்களை மாணவர்கள் அதிகம் விரும்பவில்லை. இதற்கு சமூக ஊடகங்களின் தாக்கம் தான் காரணம். ஆனால் கோர் படிப்புகளை படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

90 விதமான கோர்ஸ்கள் இருக்கும் நிலையில், இதுவரை பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்களில் 55%க்கும் மேற்பட்டோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்துள்ளனர். 18% பேர் இ.சி.இ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும், இ.இ.இ படிப்பில் 6%, மெக்கானிக்கல் படிப்பில் 5%, சிவில் படிப்பில் 2% பேர் சேர்ந்துள்ளனர்.

ஆனால் நம் அன்றாட வாழ்வில் கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு அதிக தாக்கம் உண்டு. எனவே கோர் படிப்புகளை தேர்வு செய்வது அவசியம். கடந்த ஆண்டு கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வானவர்களுக்கு இன்னும் அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றும் சில தகவல்கள் வருகின்றன. ஒரே துறைச் சார்ந்து இருப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளுக்கு தேவையும், எதிர்காலமும் இருக்கிறது என்றாலும், அதிகமானோர் படிக்கும்போது சிக்கல் ஏற்படலாம்.

எனவே ரவுண்ட் 3 மாணவர்கள் கோர் இன்ஜினியரிங் படிப்புகள் மீது கவனம் செலுத்துங்கள். இன்னும் நிறைய டாப் கல்லூரிகளிலே இந்த கோர் இன்ஜினியரிங் படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன. எனவே அவற்றை தேர்வு செய்து, நன்றாக படித்து, உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.

&t=209s

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment