தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங்கின் முதல் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், டாப் கல்லூரிகளில் இன்னும் எந்தெந்த இடங்கள் காலியாக உள்ளது என்ற தகவலை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகளில் இன்னும் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளது என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார். அதில், கிண்டி பொறியியல் கல்லூரியில், பயோமெடிக்கல், இண்டஸ்ட்ரியல், மேனுபாக்சரிங் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் இருக்க வாய்ப்புள்ளது. எம்.ஐ.டி கேம்பஸில் ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ரூமெண்டேசன் போன்ற பிரிவுகளில் காலியிடங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
பெரும்பாலான டாப் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, இ.சி.இ, இ.இ.இ, சிவில், மெக்கானிக்கல் போன்ற டாப் கோர்ஸ்கள் நிரம்பியிருக்கும். அதேநேரம், அந்த டாப் கல்லூரிகளில் பெரிதும் விரும்பப்படாத கோர்ஸ்களில் இடங்கள் காலியாக இருக்கும். பாடப்பிரிவை விட கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பது சிறந்தது. எனவே சிறந்த கல்லூரியில் இதுபோன்ற பெரிதும் விரும்படாத கோர்ஸ்களை தேர்ந்தெடுத்து படிப்பது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil