தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங்கின் மூன்றாவது சுற்று முடிவடைந்துள்ள நிலையில், துணை கலந்தாய்வு என்பது என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எஸ்.சி.ஏ.,விலிருந்து எஸ்.சி கவுன்சலிங் என்பது என்ன? ஆகியவற்றை இப்போது பார்க்கலாம்.
Advertisment
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 442 கல்லூரிகளில் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. மூன்றாவது கவுன்சலிங் முடிவடைந்துள்ள நிலையில், ஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், துணை கலந்தாய்வு என்பது என்ன? எஸ்.சி.ஏ.,விலிருந்து எஸ்.சி கவுன்சலிங் என்பது என்ன? குறித்து இப்போது பார்ப்போம். இதுகுறித்து கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். ஏற்கனவே சீட் எடுத்து, ஆனால் அந்த சீட் பிடிக்காதவர்கள் அல்லது பணம் கட்ட முடியாதவர்கள் துணை கலந்தாய்வு என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியுள்ளது, கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும்.
எஸ்.சி.ஏ – எஸ்.சி கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் ஏற்கனவே கவுன்சலிங்கில் கலந்துக் கொண்டு ஒதுக்கீட்டைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்லூரியில் சேர்க்கைப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரிகள் சான்றிதழ்கள் மற்றும் கட்டணங்களை திருப்பி அளிக்க மறுக்க முடியாது. துணை கலந்தாய்வில் 45000 – 50000 இடங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“