Advertisment

TNEA Cut Off: பொறியியல் உத்தேச கட் ஆஃப்; கடந்த ஆண்டை விட 0.5 வித்தியாசம்?

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்? கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
counselling

counselling

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆஃப் எப்படி இருக்கும் என இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு நல்ல மவுசு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஜே.இ.இ மார்க் குறைவா? இன்ஜினியரிங் படிக்க இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கு!

இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் சற்று குறையலாம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வணிகவியல் மாணவர்களையும் சேர்த்து 591 மதிப்பெண்களுக்கு மேல் 749 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 656 மாணவர்களே 591 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். 581 மதிப்பெண்களுக்கு மேல் 4263 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 4482 மாணவர்கள் 581 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர்.

551 மதிப்பெண்களுக்கு மேல் 28,418 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 30,135 மாணவர்கள் 551 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். 501 மதிப்பெண்களுக்கு மேல் 1,02,930 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 1,09,226 மாணவர்கள் 501 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். வணிகவியல் பாடத்தில் 5278 மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளனர். கணக்கியல் பாடத்தில் 6500க்கு மேற்பட்ட மாணவர்களும், பொருளாதாரத்தில் 1760 மாணவர்களும் சென்டம் எடுத்துள்ளனர். இதனால் சென்டம் எடுத்தவர்களில் வணிகவியல் மாணவர்களின் ஆதிக்கம் கணிசமாக உள்ளது.

பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்களை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். இதில் 200க்கு 200 மதிப்பெண்களில் 116 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு தரவரிசையின்படி, சி.பி.எஸ்.இ மாணவர்களையும் சேர்த்து 200க்கு 200 மதிப்பெண்களில் 135 மாணவர்கள் இருந்தனர். 195க்கு மேல் 3058 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 3018 மாணவர்கள் இருந்தனர். 190க்கு மேல் 6899 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 8299 மாணவர்கள் இருந்தனர்.185க்கு மேல் 11890 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 14435 மாணவர்கள் இருந்தனர். 180க்கு மேல் 18051 மாணவர்கள் உள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டு 20376 மாணவர்கள் இருந்தனர்.

இதனால் இந்த பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்களில் 195 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு 0.5 மதிப்பெண்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிடைத்த கல்லூரிகள் கிடைக்கலாம். 190 – 195 மதிப்பெண்களுக்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் ஒரு மதிப்பெண் குறைவாக உள்ளவர்களுக்கே கிடைக்கும். 1.25 வரை குறைய வாய்ப்பும் உள்ளது. 180 – 190 மதிப்பெண்களுக்கு கிடைத்த கல்லூரி இந்த ஆண்டில் 1.5 மதிப்பெண் குறைவாக உள்ளவர்களுக்கே கிடைக்கும். 150-170 எடுத்தவர்களுக்கு பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.

எனவே 180 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு டாப் 30 கல்லூரிகளிலே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நோக்கிச் செல்வதை விட, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுடன் கம்ப்யூட்டர் சார்ந்த படித்துக் கொள்வது எதிர்காலத்திற்குச் சிறந்தது.

அடுத்ததாக வணிகவியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நல்ல மவுசு உள்ளது. அதிகமான மாணவர்கள் சென்டம் எடுத்துள்ளதால் டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்க கடுமையான போட்டி இருக்கும். டாப் கல்லூரிகளில் 198க்கு மேல் கட் ஆஃப் இருக்க வாய்ப்புள்ளது. பொறியியல் அல்லது வணிகவியல் என எந்தப் படிப்பு படித்தாலும் கோர்ஸை விட கல்லூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling Engineering
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment