/indian-express-tamil/media/media_files/2025/10/12/ranipet-temple-jobs-2025-10-12-15-44-16.jpg)
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
தமிழ் புலவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் B.Lit அல்லது M.A. அல்லது M.Lit படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
கடைநிலை ஊழியர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
பரிச்சாரகம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயில் வழக்கப்படி நெய்வேத்தியம் செய்ய பட்டாச்சாரியாருக்கு உதவி செய்வதற்கான அனுபவச் சான்று வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
தாளம்/ சுருதி
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
உதவி மின்பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: மின்கம்பி பணியாளர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 16,600 – 52,400
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sholinghurnarasimmar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், இராணிப்பேட்டை மாவட்டம் – 631102
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.