/indian-express-tamil/media/media_files/2024/12/13/f5bSdpPd7uEcojRk7Xjo.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குரூப் 4 தேர்வுக்கு பிரிவு வாரியான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். ஷிவம்ஸ் ஐ அகாடமி என்ற யூடியூப் சேனலில் வழங்கப்பட்டுள்ள விபரங்களின்படி, இந்த கட் ஆஃப் கணிப்பு தற்காலிக விடைக்குறிப்புகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது
இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 160
பி.சி – 159
பி.சி.எம் – 148
எம்.பி.சி – 158
எஸ்.சி – 156
எஸ்.சி.ஏ – 148
எஸ்.டி - 150
தட்டச்சர் பணியிடங்களுக்கான கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 156
பி.சி – 155
பி.சி.எம் – 144
எம்.பி.சி – 154
எஸ்.சி – 152
எஸ்.சி.ஏ – 144
எஸ்.டி - 146
அதேநேரம் வழங்கப்படும் கருணை மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த கட் ஆஃப் மதிப்பெண்கள் உயர வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.