TNPSC group 4 result date: இத்தனை நாட்களில் ரிசல்ட்… சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கான மதிப்பெண் இந்த ரேஞ்சில் இருக்கும்!

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எத்தனை வெளியிடப்படும்? சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும்? முழு விபரம் இங்கே

TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எத்தனை வெளியிடப்படும்? சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும்? முழு விபரம் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
tnpsc exam

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், எந்தத் தேதியில் வெளியாகும், சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 4662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவிப்பின்போது 3935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

இந்தநிலையில், தேர்வு முடிவுகள் எந்தத் தேதியில் வெளியாகும், சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்? என்பது குறித்த தகவல்கள் கிரீன் டி.என்.பி.எஸ்.சி அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

வீடியோவின்படி, தமிழில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண்கள் குறைவாக வரும். முன்னர் தமிழில் 90 கேள்விகளுக்கு மேல் நிறைய தேர்வர்கள் எடுப்பர். ஆனால் இந்த முறை 80 கேள்விகளுக்கு மேல் எடுப்பதே கடினமாக இருந்தது. பள்ளி பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப சில பகுதிகளை மட்டும் படித்தவர்கள் 50 கேள்விகளுக்கு எளிதாக விடையளித்திருக்கலாம். அடுத்த 30 கேள்விகளுக்கு சாய்ஸ்களை நீக்குதல், உத்தேசமாக விடையளித்தல் போன்ற உத்திகள் மூலம் சிலர் விடையளித்திருக்கலாம். எனவே ஒட்டுமொத்தமாக 80 கேள்விகளுக்கு மேல் விடையளித்திருக்கலாம்.

இன்னும் 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட் ஆஃப் 149 கேள்விகள் என்ற அளவில் இருக்கும். அதேநேரம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 140 கேள்விகளுக்கு மேல் விடையளித்தவர்களுக்கு அழைப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Tnpsc Group4

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: