அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துனர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். இந்நிலையில் இன்று மதியம் 1 மணி முதல் வருகின்ற 18.9.2023 மதியம் 1 மணி வரை விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களும் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“