/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-19-at-11.51.48.jpeg)
உதயநிதி
விளையாட்டு நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருவாரூரில் நாளை நடைபெறும் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் இன்று காலை திருச்சி வந்தார்.
திருச்சிக்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு திட்டம் தரமாக உள்ளதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-19-at-11.51.49.jpeg)
திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முதற்தசா மேல்நிலைப் பள்ளியிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அவர்களுடன் அமர்ந்து தானும் காலை உணவு உண்டார். பின்னர் மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். பள்ளியில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தவர் மாணவர்கள் செல்லும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர், ஆசிரியர்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-19-at-11.51.48-1.jpeg)
இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.