/indian-express-tamil/media/media_files/2025/10/24/jobs-common-2025-10-24-12-57-00.jpg)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Legal Aid Defense Counsel
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: கிரிமினல் சட்ட வழக்குகளில் 1-3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
Office Assistants/ Clerks
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
Receptionist cum Data Entry Operator (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
Office Peon (Munshi/ Attendant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0412092a75caa75e4644fd2869f0b6/uploads/2025/10/2025100719.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Srivilliputhur, Virudhunagar
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us