Advertisment

Election 2019: முதல்வர் பற்றி அவதூறு- திமுக ஐ.டி. பிரிவு மீது 4 பிரிவுகளில் வழக்கு

கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரச்சாரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm edappadi kpalaniswami campaign election 2019

Election 2019 tamilnadu campaign : நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழக்கத்தில் இதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் களம் காணும் தங்களது கட்சியினருக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மேலும் படிக்க.. வரலாறு பேசும் திண்டுக்கல் தொகுதியை கோட்டை விட்ட அதிமுக !

Election 2019 tamilnadu campaign live update: பிரச்சார பீரங்கியாக களம் இறங்கியுள்ள் நட்சத்திர பேச்சாளர்கள். அனல் பறக்கும் தேர்தல் களத்தின் நேரடி தகவல்கள்!

Live Blog

வாக்குச்சாவடிகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர் என பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.



























Highlights

    15:41 (IST)06 Apr 2019

    முதல்வர் பற்றி அவதூறு- திமுக ஐ.டி. பிரிவு மீது 4 பிரிவுகளில் வழக்கு

    முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்புவதாக அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் திமுக ஐ.டி பிரிவு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

    14:34 (IST)06 Apr 2019

    அன்புமணி மீது வழக்குப் பதிவு

    ‘வாக்குச்சாவடிகளில் பாமக.வினர் மட்டுமே முகவர்களாக இருப்பார்கள்’ என பிரசாரத்தின் போது அன்புமணி பேசியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய காஞ்சிபுரம் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பொன்னையா உத்தரவு பிறப்பித்தார்.

    13:31 (IST)06 Apr 2019

    முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 152 அடி ஆக்குவோம்: ஓ.பி.எஸ். மகனை ஆதரித்து இபிஎஸ் பிரசாரம்

    தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உச்சநீதிமன்ற அனுமதியுடன் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நிகழ்ந்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.’ என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

    12:24 (IST)06 Apr 2019

    கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்

    கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான். கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல.’ என்றார்.

    09:56 (IST)06 Apr 2019

    விழுப்புரத்தில் ஸ்டாலின்!

    விழுப்புரம் காய்கறி சந்தையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரிப்பு விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு, வாக்கு சேகரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    08:56 (IST)06 Apr 2019

    தயாநிதி மாறன் மீது வெடித்த சர்ச்சை:

    மத்திய சென்னை பாமக வேட்பாளரான சாம் பால் மது அருந்துவது போன்ற புகைபடமொன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக விளக்கமளித்த சாம் பால் எதிர்கட்சிகள் மார்ஃபிங் செய்து பரப்பி அவதூறு செய்வதாக குற்றம்சாட்டினார்.திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பிரச்சாரத்தின் போது இந்த படம் குறித்து அவதூறு பரப்புரை செய்ததாகவும், செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

    08:54 (IST)06 Apr 2019

    தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு!

    தன் மீது அவதூறு பரப்பியதாக மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் அளித்த புகாரின் பேரில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    08:38 (IST)06 Apr 2019

    அன்புமணி வீடியோ!

    08:31 (IST)06 Apr 2019

    அன்புமணியின் சர்ச்சை பேச்சு!

    திருப்போரூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அன்புமணி, தேர்தல் அன்று என்ன நடக்கும்? பூத்தில் என்ன நடக்கும்? பூத்தில் நாம் தான் இருப்போம். நம்முடைய ஆட்கள் மட்டும் தான் இருப்பார்கள். அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில், என்ன புரிகிறதா? என பேசினார்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

    நேற்று காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலையும், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகத்தையும் ஆதரித்து திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
    Dmk Aiadmk General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment