அண்ணா சொல்லாத, மாமானு சொல்லு; பிரபல நடிகையை திட்டிய கேப்டன்: ஷூட்டிங் சம்பவம்!

பிரபல நடிகை நளினி ஷூட்டிங்கின் போது நடிகர் விஜயகாந்த் தன்னிடம் பேசுவது குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

பிரபல நடிகை நளினி ஷூட்டிங்கின் போது நடிகர் விஜயகாந்த் தன்னிடம் பேசுவது குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
vijayakanth

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை நளினி. 1980- 90 காலக்கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மோகன் லால், சத்யராஜ், விஜயகாந்த், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். இவரும் நடிகர் மோகனும் நடித்திருந்த ‘நூறாவது நாள்’ திரைப்படம் தற்போது வரை பேசும் படமாக அமைந்தது.

Advertisment

இவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும்  இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2000-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். ராமராஜன் - நளினி தம்பதியருக்கு அருணா, அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நளினி பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

இவர் நடித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து பல தொடர்களில் நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சாமி பக்தி அதிகம் கொண்ட நடிகை நளினி, கோயில்களுக்கு அடிக்கடி சென்று வேண்டுதல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். நடிகை நளினி, நடிகர் விஜயகாந்தை அண்ணா என்று தான் அழைப்பார். இவர்கள் இருவரும் இணைந்து 14-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். சில திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அண்ணா நல்ல கட்டிப்பிடிங்க என்று நளினி சொன்னால் கூட விஜயகாந்த் அப்படி செய்யமாட்டாராம்.

இந்நிலையில், நடிகை நளினி, நடிகர் விஜயகாந்த் குறித்து நேர்காணல் ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, "விஜயகாந்தை நான் எப்போதும் அண்ணா என்று தான் சொல்வேன். படங்களில் நடிக்கும் போது அண்ணா என்று சொல்லாத அப்படி சொன்னா எனக்கு எதுவுமே வராது என்று விஜயகாந்த் என்னை திட்டுவார். அப்ப எப்படி சொல்லனும்னு கேட்டா மாமா என்று சொல்ல சொல்வார். அண்ணாவை தவிர எதுவுமே வராது. 

Advertisment
Advertisements

எதாவது காட்சி நடித்து கொண்டிருக்கும் போது இந்த காட்சி முடியும் வரைக்குமாது அண்ணா என்று சொல்லாதே என்று கூறுவார். எனக்கும் என் கணவர் ராமராஜுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்ட போது முதலில் என் வீட்டிற்கு வந்தது விஜயகாந்த் அண்ணா தான். நீ கவலைப்படாத நளினி உனக்கு நான் இருக்கிறேன். நீ திரும்ப நடிக்க போறியா என்ன வேண்டும் என்று சொல்லு என்றார். விஜயகாந்த் அண்ணா இருந்தால் எனக்கு யானை பலம் இருப்பது போன்ற உணர்வு இருக்கும்” என்றார்.

Cinema Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: