சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ஜெயிலர்.
இந்தப் படம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல். ரவ தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், “ஜெயிலர் படத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியிருப்பது தவறு” எனக் கூறப்பட்டுள்ளது.
ஜெயிலர் படத்தில் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமனா, ரம்யா கிருஷ்ணன் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“