/indian-express-tamil/media/media_files/2025/10/08/vijay-2025-10-08-15-19-39.jpg)
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். இவர் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். பின்னர் தன்னுடைய பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அரசியலில் இருந்து விலகி அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் நெப்போலியன், நடிகர் விஜய் போன்றவர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் , விஜய் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு ஏற்பட்ட மனம் கஷடம் குறித்து பகிர்ந்து கொள்ளும் த்ரோபேக் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தொகுப்பாளர் நடிகர் நெப்போலியனிடம் உங்களுக்கும் விஜய்க்கும் சண்டை நடந்ததாக கேள்வி பட்டோம் அது உண்மையா என்று கேட்கிறார். அதற்கு நெப்போலியன் அதுபோன்று நடந்தது உண்மை தான். என் வாழ்க்கையில் இதுபோன்று நடந்தது இல்லை. அது எந்த சூழ்நிலையில் நடந்திருந்தாலும் அது தப்பு தான் என்று கூறினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போக்கிரி’. இந்த படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், நெப்போலியன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 'போக்கிரி’ படப்பிடி்ப்பின் போது கேரவனில் விஜய் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். அப்போது நடிகர் நெப்போலியன் அவசரமாக தம்பி விஜய்கிட்ட ஒன்னு பேசணும் என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டு இருக்கிறார்.
ஆனால், பவுன்சர் உள்ளே யாரையும் சார் அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்புறம் வந்து பேசுங்க என்று சொல்லி இருக்கிறார்கள். அது மற்றவர்களுக்கு சொல்லி இருப்பார், நான் வந்து இருக்கேன்னு சொல்லுங்க தம்பிக்கு தெரியும் என்று நெப்போலியன் சொல்ல அப்போது வெளியில் வந்த விஜய் ஏன் நீங்க என்கிட்ட பேச வேற நேரமே இல்லையா? உடனே வரணுமா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கும்போது ஏன் வந்து தொல்லை பண்றீங்க என்று காட்டமாக பேசியுள்ளார்.
இது பழைய செய்தி என்றாலும் பகிர்வேண்டிய நேரம் இதுதான்
— நந்தினி ❣️ (@Nandhini1360381) October 7, 2025
~போக்கிரி படம் ஷூட்டிங் அப்போ கேரவன் உள்ளே விஜய் ஓய்வு எடுத்துகொண்டு இருக்கும்போது அவசரமாக தம்பி விஜய்கிட்ட ஒன்னு பேசணும் என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டு இருக்கிறார் நெப்போலியன், ஆனால் பவுன்சர் உள்ளே யாரையும் சார் அனுப்ப… pic.twitter.com/COky9hUJ1Z
திரைதுறையில் அனுபவம் உள்ள ஒரு பெரிய நடிகர் நெப்போலியன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. வயதுக்கு கூட மரியாதை இலையே என்று அவமானமாக உணர்ந்த நெப்போலியன் அதன்பிறகு 15 ஆண்டுகள் கடந்தும் விஜய்யிடம் பேசுவதில்லை. அவரின் படங்கள் எதுவும் பார்ப்பதும் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.