மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பொற்றோர்களை சி.ஆர்.பி.எப் போலிசார் கேள்வி கேட்டு துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகிரிதண்டா, தீயா வேலை செய்யனும், சிவப்பு மஞ்சள் பச்சை, குமார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த எஸ்கேப் சீரிஸ் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். மேலும் தமிழ், தெங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ட்விட்டர் பக்கத்தில் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆளும் ஒன்றிய அரசையும் விமர்சித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டிராகிராமில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார் சித்தார்த். இதில் அவரது பெற்றோரை சி.ஆர்.பி.எப் காவல்துறை அதிகாரி கேள்வி கேட்டு துன்புறுத்தியுள்ளார். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறியபோதும். அந்த அதிகாரி கேட்டவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்தியில் பேசியுள்ளார். கூடுதலாக “ இந்தியா அப்படிதான் இருக்கும்” என்று கூறியுள்ளார் .இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.