இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஃபிலிம் ஃபேர் விருதுகள் இன்று ஜுன் 17 அறிவிக்கப்பட்டு விட்டன. தமிழ் திரையுலகில் கடந்த ஆண்டிற்கான (2௦16) சிறந்த புது முக நாயகனாக மெட்ரோ படத்தில் அறிமுகமான சிரிஷ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் சிரிஷ் நடித்த மெட்ரோ படம் மாநகர்களில் நடக்கும் செயின் பறிப்புகளை மையமாகக் கொண்டது. இதில் இயல்பாக நடித்த சிரிஷ் படம் வெளியானபோதே பலராலும் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் சிரிஷின் கடும் உழைப்புக்கும் திறமைக்குமான பரிசாக சினிமா உலகின் உயர்ந்த விருதான ஃபிலிம் ஃபேர் விருது சிரிஷுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.