வசதியாலாம் இல்ல, 2 சட்டை, 2 வேட்டி, பட்டாப்பட்டி அவளேதான் எம்.ஜி.ஆர் வாழ்க்கை: சிவகுமார் உடைத்த உண்மை!

நடிகர் எம்.ஜி.ஆர் தன் சிறுவயதில் பட்ட வேதனைகள் குறித்து நடிகர் சிவகுமார் கவலையுடன் கூறினார்.

நடிகர் எம்.ஜி.ஆர் தன் சிறுவயதில் பட்ட வேதனைகள் குறித்து நடிகர் சிவகுமார் கவலையுடன் கூறினார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
shivakumar

பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பல சாதனைகளை செய்துள்ளார். தனது வாழ்க்கையில் சிறுவயது முதலே பசி, வறுமை, அவமானம் என அனைத்து இன்னல்களையும் கடந்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது தனித்துவமாக திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனது ஆளுமையை செலுத்தினார்.  அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியதை தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களும் வெற்றிகள் குவிக்க தொடங்கியது. 

Advertisment

இதன் காரணமாக 50-கள் தொடங்கி 70-களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து சாதித்தார் எம்.ஜி.ஆர். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையுடன் இருந்த எம்.ஜி.ஆர் தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பை 18 நாட்களில் முடித்து வெளியிட்டு 100 நாட்கள் ஓட வைத்த பெருமைக்கு சொந்தக்காரர். தனது திறமை மூலம் படிப்படியாக முன்னேறிய இவர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி நாட்டையை ஆண்டார்.

இந்நிலையில், நடிகர் எம்.ஜி.ஆர் பட்ட வேதனைகள் குறித்து நடிகர் சிவகுமார் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “எம்.ஜி.ஆர் வசதியானவர் எல்லாம் இல்லை. 1940-களில் இரண்டு சட்டை, இரண்டு வேட்டி இதுதான் எம்.ஜி.ஆரின் உடைகள். மாலை நேரம் ஆனதும் எம்.ஜி.ஆர் அந்த சட்டையும், வேட்டியும் எடுத்து துவைத்து போடுவார். காலையில் அது பாதி காய்ந்தும் காயாமலும் இருக்கும். அப்போது இஸ்திரி பெட்டி எல்லாம் கிடையாது. ஒரு செம்பில் சூடான தண்ணீரை எடுத்து அயர்ன் செய்வார்.

அந்த சட்டையை போட்டுக் கொண்டு வீட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்தே ஸ்டுடியோவிற்கு செல்வார். அங்கு சென்று எதாவது வேஷம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் ராஜா மாதிரி இருக்க உனக்கு எப்படி சைடு கதாபாத்திரம் தர முடியும் என்று கூறிவிட்டு வேஷம் கொடுக்க மறுத்துவிடுவார்கள். அடுத்த ஸ்டியோவிற்கு பேருந்தில் தான் செல்ல முடியும். பத்து ரூபாய் தான் எம்.ஜி.ஆரிடம் இருந்தது.

Advertisment
Advertisements

அடுத்த ஸ்டியோவிற்கு செல்வதற்காக பேருந்தில் இருந்து இறக்கிய போது ஒரு இளைஞன், அண்ணா சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது என்றார். பேருந்திற்கு கொடுத்து போக  மீதம் இருந்த ரூ.7-ல் மூன்று ரூபாயை எம்.ஜி.ஆர் அந்த இளைஞனுக்கு தானமாக கொடுத்தார். சாப்பிட வழியில்லாத போதே எம்.ஜி.ஆர் தானம் செய்தவர். அதனால் தான் எம்.ஜி.ஆர் கொடை வள்ளல். எம்.ஜி.ஆர் வாழ்க்கை எல்லாம் நீங்கள் நினைப்பது போன்று ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை இல்லை.

எம்.ஜி.ஆர் 19 வயதில் திருமணம் செய்தார். அவரது முதல் மனைவி இரண்டு வருடத்தில் இறந்துவிட்டார். சோறு போட முடியவில்லை வசதி இல்லை அவருக்கு. எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவி ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர். இப்படி பல கஷ்டங்களை அனுபவித்த எம்.ஜி.ஆருக்கு முதல் முதலில் ‘மலைக்கள்ளன்’ திரைப்படம் ஹிட்டானது. அடுத்ததாக ‘அலிபாபாவும் 40 திருடர்களும் ஹிட்டானது. அப்படி படிப்பாக போய் நாட்டையை பிடித்துவிட்டார். 

Mgr Actor Sivakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: