தமிழ்நாடு மாநில கராத்தே விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட டிரெடிஷனல் கராத்தே சங்கம் இணைந்து நடத்திய இந்த போட்டிகளை பிரபல நடிகரும்,கராத்தே வீரரும் ஆன நடிகர் சுமன் தொடங்கிவைத்தார்.
Advertisment
முன்னதாக செய்தியார்களிடம் பேசிய நடிகர் சுமன், “கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை பெண்கள் கற்று கொள்வது அவசியமாக இருக்கிறது. கராத்தே கற்று கொள்வதால் நமது உடல் நம்மை பாதுகாக்கும் ஆயுதமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில், சென்னை,மதுரை,கோவை, தூத்துக்குடி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, , திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் வயது அடிப்படையில் சீனியர்,ஜீனியர்,சப் ஜூனியர்,கேடர் என பிரிக்கப்பட்டு, சிறுவர்களுக்கு தனியாகவும், சிறுமிகளுக்கு தனியாகவும் நடைபெற்றன.
கட்டா மற்றும் குமித்தே பிரிவில் தனி மற்றும் குழு போட்டிகள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் அசத்தலாக தங்களது சண்டை திறனை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“