திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில், வைகோ புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம், “திருச்செந்தூர் முருகனை பார்த்தது மனதுக்கு ரொம்ப ஆறுதலாக உள்ளது. இந்த முருகனை வணங்கும் போது மக்களின் கஷ்டங்கள், குறைகள் எல்லாம் தீரும்” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் பொங்கலுக்கு வெளிவரவுள்ள துணிவு, வாரிசு படத்தில் எதனை முதலில் பார்ப்பீர்கள் எனக் கேள்வியேழுப்பினார்கள்.
அதற்கு வடிவேலு, “எனக்கு அதப்பத்தி தெரியலீயே. எல்லாப் படமும் ஓடணும். தயாரிப்பாளர் நல்லா இருக்கணும், சினிமா ஓடினால்தான் தொழிலாளர்கள் நல்லா இருக்க முடியும். அதனால்தான் எல்லா படமும் ஓடணும்” என்றார்.
நாய் சேகர் ரிட்டன் படம் குறித்து கூறுகையில், “அது குடும்ப படம். மக்கள் குழந்தை, மனைவியோடு படம் பார்த்த விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
அந்தப் படம் தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது” என்றார். தொடர்ந்து, உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்படும் மாமன்னன் குறித்து அவரிடம் கேட்டார்கள்.
“அதற்கு அது நல்ல படம். ரொம்ப நல்லா வந்துள்ளது” என வடிவேலு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/