Advertisment

நாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி?

ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Metoo

Metoo

Metoo : விளம்பர படப்பிடிப்பின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிரபல நடிகர் சண்முகராஜன் மற்றும் இயக்குநர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

Metoo விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்திலும், விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியவருமான நடிகை ராணி காவல் நிலையத்தில் துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

ஒரு விளம்பர படத்தில் நடித்த போது சண்முகராஜன் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு நான் இணங்கவில்லை என்றதும் எனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். என் கணவர் இதை தட்டிக் கேட்டபோது சண்முகராஜன் என்னை தாக்கினார் என ராணி புகார் அளித்துள்ளார்.

நடிகர் சண்முகராஜன் விருமாண்டி, எம்டன் மகன், சண்டக்கோழி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Madras Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment