scorecardresearch

கணவர் மரணம்: சோகப் பிடியில் இருந்து மீண்ட மீனா; வெளியிட்ட முதல் போட்டோ

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது சமகால நடிகைகளாக ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோருடன் இணைந்துள்ளார்.

கணவர் மரணம்: சோகப் பிடியில் இருந்து மீண்ட மீனா; வெளியிட்ட முதல் போட்டோ

90-களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிககையாக இருந்தவர் நடிகை மீனா.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அவர், கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாசகர் என்பரை திருமணம் செய்துகொண்டார்.

 கணவர் வித்யாசாகரின் இழப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் நடிகை மீனா.

இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் முன்பு மீனாவின் கணவர் வித்யாசகர் உடல்நலக்குறைபாடு காரணமாக திடீரென மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்த நிலையில், கணவரை இழந்த மீனாவுக்கு பலரும் ஆறுதல் கூறினர்.

 கணவர் வித்யாசாகர் இறந்து ஒரு மாதம் கழிந்த நிலையில், துயரிலிருந்து மீனா மீண்டு வந்திருப்பதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து கணவர் இறந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், தற்போது மீனா அதில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதை அவரது இன்ஸ்டாகிராம் பதிவு காட்டுகிறது.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது சமகால நடிகைகளாக ரம்பா, சங்கவி, சங்கீதா ஆகியோருடன் இணைந்துள்ளார்.

 தற்போது நடிகைகள் ரம்பா, சங்கவி, சங்கீதா கிரிஷ் ஆகியோர் குடும்பத்துடன் மீனா வீட்டுக்கு சென்றுள்ளனர். அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் மீனா.

மேலும் மற்றொரு புகைப்படத்தில், இவர்களுடன. இணைந்து நடிகை சங்கீதா மற்றும் க்ரிஷ் ஆகியோர் உள்ளனர் சில மாதங்களுக்கு பிறகு மீனா வெளியிட்டுள்ள இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress meena post new photo on her instagram after her husband death