தமிழ் சினிமா உலகில் வெளிப்படையாக பேசி வரும் நடிகை ரேகா நாயர், ஓ.பி.எஸ் உடன் இணைந்து வேலை செய்த அனுபவம் பற்றி பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை ரேகா நாயர் சீரியல்களில் நடித்து வந்த நிலையில், சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், அவருக்கு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதை தட்டிக் கழிக்காமல், வாய்ப்பு கிடைத்த படங்களில் நடித்து வந்தார்.
ரேகா நாயரின் நீண்ட நாள் முயற்சிக்கு பலனாக, அவருக்கு புகழ் வெளிச்சத்தைக் கொடுத்த படம் என்றால் அது, இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படம்தான். இந்த படத்தில் ரேகா நாயர் நிர்வானமாக நடித்திருந்தார்.
ரேகா நாயர் நிர்வானமாக நடித்தது குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேகா நாயர் அடிக்கப் பாய்ந்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுமட்டுமல்ல, தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால் தான் கண்டிப்பாக நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று தனுஷ் மீதான கிரஷ்ஷை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இப்படி, தமிழ் சினிமாவில் வெளிப்படையாக பேசி வரும் நடிகை ரேகா நாயர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து வேலை செய்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
ரேகா நாயர் தனது பேட்டியில், ஓ.பி.எஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கிறேன். ஓ.பி.எஸ் கட்சி விட்டு கட்சி மாறும்போது, அவருக்கு தமிழ் எழுதுவதற்கு யாரோ ஒருவர் மூலம் அழைப்பு வந்தது. அதற்காக தினமும் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் ரொம்ப அமைதியான ஒரு மனிதர் என தெரிவித்துள்ளார்.
நடிகை ரேகா நாயர், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உடன் இணைந்து வேலை செய்த அனுபவத்தைப் பற்றி கூறியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.