எனக்கு எதாவது நடந்தால் அதற்கு காரணம் இவர்தான் என்று ரஜினி பட நடிகர் குறித்து பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ஆஷிக்யூ பனயா அப்னே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஸ்ரீ தத்தா. தொடர்ந்து பல இந்தி மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்திருந்த அவர், 2010-ம் ஆண்டு தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகரான நானா படேக்கர் மீது மீடூ புகார் தெரிவித்து பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தனுஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு முக்கிய காரணம் நானா படேக்கர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது பதிவில்,
நான் தற்போது உடல் ரீதியாகவும். மனரீதியாகவும மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு எதாவது நேர்ந்தால், அதற்கு நானா படேக்கரும், அவரது வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களும்தான் காரணம். மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜபுத் மரணத்தில், தொடர்புடையாதாக கூறப்படும் பாலிவுட் மாஃபியா கும்பல்தான் இதற்கும் காரணம். அவர்கள் அனைவருக்கும் ஒரே வக்கீல்தான்.
அவர்களின் திரைப்படங்களை முற்றிலும் புறக்கணியுங்கள்.என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பும் திரைத்துறையினரையும், பத்திரிக்கையாளர்களையும், மோசமான அவதூறுக்கு பின்னால் செல்லுங்கள். நீதி என்னை தோற்றடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“