/tamil-ie/media/media_files/uploads/2017/11/akshay-kumar.jpeg)
‘2.0’ படத்தில் பறவைகளைக் காதலிப்பவராக நடித்துள்ளார் அக்ஷய் குமார் என்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ‘இந்திர லோகத்து சுந்தரியே’, ‘ராஜாளி’ என இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. மொத்தம் 3 பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இந்தப் படத்தில், இன்னொரு பாடல் பிறகு வெளியிடப்படும் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடல் என்ன என்ற விவரம் கிடைத்துள்ளது.
மேற்கண்ட இரண்டு பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி, இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். ‘புல்லினங்கள்’ என்று இந்தப் பாடல், பறவைகளைப் பற்றி எழுதப்பட்டது. முதல் இரண்டு பாடல்களையும் ஹீரோ - ஹீரோயினுக்காக எழுதிய மதன் கார்க்கி, இந்தப் பாடலை அக்ஷய் குமாருக்காக எழுதியுள்ளார். பறவைகளின் காதலனாக அவர் நடித்துள்ளார் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.