/tamil-ie/media/media_files/uploads/2018/01/Actor-Surya.jpg)
சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தில், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலீஸானது. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை, கடந்த புத்தாண்டு அன்று நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது.
செல்வராகவன் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தத் தகவலை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தில், பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை சென்று கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் கே.வி.ஆனந்த் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.