ஆர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஆர்யா வெற்றிப்படம் கொடுத்த பல வருடங்களாகிவிட்டது. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’தான் ஆர்யாவின் கடைசி வெற்றிப்படம். அதற்குப் பிறகு அவர் நடித்தது எல்லாமே தோல்விப் படங்கள்தான். இருந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா.
ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கடம்பன்’ மூலம் எக்கச்சக்க லாஸ். இதனால், அடுத்ததாக அமீர் இயக்கத்தில் ஆர்யாவும், அவர் தம்பி சத்யாவும் நடித்த ‘சந்தனத்தேவன்’ பாதியிலேயே நிற்கிறது. வேறு எந்தப் படமும் இல்லாத நிலையில், சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’வில் கமிட்டானார். ஆனால், அந்தப் படம் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ஹர ஹர மஹாதேவஹி’ என ஆபாச வசனங்கள் கொண்ட படத்தை எடுத்த சந்தோஷ் பி ஜெயக்குமார், இந்தப் படத்தை இயக்க உள்ளார். அவர் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா நடித்து வருகின்றனர். இந்த இரண்டு படங்களும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கஜினிகாந்த்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார். சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய இரண்டு படங்களும் ‘அந்த’ மாதிரி டைப்பானவை என்பதால், இதுவும் அப்படி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.