Bigg Boss 5 Tamil Day 16 Review Annachi Raju Priyanka Tamil News : ஆஹா.. ஆஹா... இப்போதுதான் பிக் பாஸ் வீடு பிக் பாஸ் வீடாக மாறி வருகிறது. சண்டைகள், கொளுத்திப் போடுவது, விளையாட்டு என அனைத்தும் ஆரம்பமாகிவிட்டது. அது என்னவோ போங்க, ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி மக்கள் மாறுவது போன்று, இந்த ஐந்தாம் சீசனை ஒட்டி, தொட்டதெல்லாம் ஐந்து என்ற எண் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. அப்படி என்ன பிக் பாஸ் ஸ்டார்ட் ஆகிடுச்சுனு இவ்வளவு சொல்லுறீங்கன்னு உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது... வாங்க பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் எடுத்து எடுப்புலேயே, நம்ம மினி அன்பு கேங் மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக்கொண்டிருப்பதைக் காட்டினார்கள். இவ்வளவு நாள் பிரியங்கா, பிரியங்கா என்று மக்கள் கூவிக்கொண்டிருந்த நிலையில் வரவர பிரியங்காவின் பெயரும் மங்களாகப் போகிறது. அதாவது, அடிபட்டு மிதி பட்டு வருகிறது. ஆனால், விஜய் டிவி பிரபலத்தை விஜய் டிவியே இப்படிப் போட்டுக்கொடுப்பதனால் ஏதாவது உள்குத்து இருக்குமோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
'தொட்டதுக்கெல்லாம் இசைவாணி ஃபீல் பண்ணுது. அவருடைய ஏழ்மை நிலையை வைத்து பரிதாப வாக்குகளை சேர்கிறார். எங்க வீட்டில் தண்ணீர் வராது என்று சொல்லி புலம்புகிறாள். எங்கள் வீட்டிலும்தான் தண்ணீர் வராது' என்றெல்லாம் பிரியங்கா கூறியது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. என்னதான் இருந்தாலும் ஒருவருடைய வறுமை நிலையையும், அதனால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் பிரதிபலிப்பையும் இப்படி தவறாகப் பேசுவது மிகவும் தவறு.
'சின்ன மச்சான்...' பாடலோடு விடிந்த பதினாறாம் நாள், நாணயத்தைத் திருடி ஒளித்துவைக்கும் டாஸ்க்கோடு விறுவிறுப்பாக நகர்ந்தது. 'நீங்கள் நீங்கலாக இருந்தால் எங்களுக்குப் பிடிக்காமல் போனாலும்கூட மக்களுக்குப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், எங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய வேண்டாம்' என்று இமான் அண்ணாச்சி சின்னபொண்ணுக்கு கொடுத்த அட்வைஸ், டாப் டக்கர். இந்த சீசனை பொறுத்த வரை, எல்லோருடனும் ஒரேபோன்று இருப்பது, ஏசுவது, என்டெர்டெயின் செய்வது என எல்லா வகையிலும் மக்கள் மனதை வென்றவராக வலம்வந்துகொண்டிருக்கிறார் அண்ணாச்சி.
அதிலும், ராஜு சொல்லச் சொல்ல நொடியில் அழுவது, சிரிப்பது என அவருடைய நடிப்பு திறனை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் ரசிக்க செய்தது. இதனைத் தொடர்ந்து லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது. யார் யார் எந்த க்ரூப் என்று அந்த க்ரூப்புக்கே கன்ஃபியூஸ் ஆகுற அளவுக்கு நாணயங்கள் எடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தனர். என்றாலும் யாருடைய உதவியும் இன்றி தனி ஆளாக நாணயத்தைத் திருடியது மதுமிதா. ஆனால், அதனை யாருக்காகக் கொடுக்கலாம் என்பதில் குழம்பிப்போயிருந்தார். இவ்வளவு நாள் இப்படிப்பட்ட ஒரு ஜீவன் வீட்டில் இருப்பதே தெரியவில்லை. ஆனால், அவருக்குள்ளும் ஏதோ இருக்கு என்பதுபோல் இருந்தது அவரின் நேற்றைய கலக்கல் விளையாட்டு.
அதேபோல யாரும் இல்லா சமயத்தில் அலேக்கா ஒரு நாணயத்தை எடுத்து ஒளித்துவைத்துக்கொண்ட வருண், எப்படி அதுக்குள்ள நாணயத்தை எடுக்குறீங்க என்று கேள்வி எழுப்பி நடித்தார் பாருங்க... நடிகன்டா டெம்ப்லேட்தான். இப்படி நாணயத்தை எடுக்க, கொடுக்க, மறைக்க என்று நகர்ந்துகொண்டிருந்த நாளில், யாரைக் காப்பாற்றலாம் என்று நினைத்தபோது நாம் ப்ரோமோவில் பார்த்தது போல தாமரையைக் காப்பாற்றப் பலரும் ஒப்புக்கொண்டனர். அதற்கு காரணம் அபிஷேக்தான் என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ள, தாமரை அவருடைய காலில் விழாவும் சென்றுவிட்டார். 'என்ன கொடுமை' பிக் பாஸ் இது!
ஆனாலும், 'யாரும் பணக்காரனுக்கு உதவி செஞ்சா பெருசா தெரியாது. இதுவே ஒரு ஏழைக்கு உதவி செஞ்சா நாம பெருசா தெரிவோம்' என்ற ராஜுவின் கவுன்ட்டர் டாப் க்ளாஸ். இதுவரை யாருடைய வெறுப்பும் சம்பாதிக்காத ஒரு போட்டியாளராக ராஜு இருக்கிறார். என்னதான் சின்னப்பொண்ணு மீது பல்வேறு விதமான மனக்கசப்புகள் இருந்தாலும், எல்லா போட்டியாளர்களும் தாமரைக்கு சப்போர்ட் செய்தால், சின்னபொண்ணுவும் பாவம்தான் என்று இமான் அண்ணாச்சி கூறிய விதம், ஜென்டில்மேன். ஒரு வழியாக இந்த டாஸ்கில் ஐக்கி பெரி முதல் மது வரை சிலரின் முகங்கள் வெளிப்பட்டாலும், சுருதி இன்னும் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார். இன்றைக்கு என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.