Bigg Boss 5 Tamil Kamal Hassan Ameer Pavani Reddy Priyanka Saved : எல்லோருடைய குடும்பத்தினரும் வந்துவிட்டனர் ஆனால், தன்னுடைய பக்கத்திலிருந்து யாரும் இன்னும் வரவில்லையே என்று ஏங்கி, அழுதுகொண்டிருந்த அமீருக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார் பிக் பாஸ். மற்றபடி நேற்றைய எபிசோடில் பெரிசாக சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடக்கவில்லை என்பது ஏமாற்றமே.
தான் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் தன்னை பார்க்க யாரும் விருப்பப்படவில்லையோ என்கிற குற்ற உணர்வு அமீருக்கு ஏற்பட்டதை முந்தைய நாள் எபிசோடில் நம்மால் காணமுடிந்தது. அப்போதும் பாவனிதான் அவரை சமாதானம் படுத்துகிறார். என்றாலும், தன்னால் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாமல், தனியே சென்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார்.
அடுத்த நாள் பாவனி என்ன உடை போடலாம் என்கிற குழப்பத்தில் இருக்க, 'புடவை உடுத்திக்கொள்' என்று அமீர் சொல்ல, இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குதா என்பதுபோல அமீரின் பதில் இருந்தாலும், சொல்லுவதை சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார். இப்போதுதான் அமீர் தன்னுடைய எல்லைக்கோட்டிற்குள் இருந்து விளையாட ஆரம்பித்திருக்கிறார். நல்ல மாற்றம் அமீர்!
எந்த உடையை உடுத்துவது என்கிற இப்படிப் பல குழப்பங்களுக்கு இடையே, அமீர் சொன்ன புடவையை உடுத்தாமல் சல்வார் உடுத்தினார் பாவனி. இப்போதுதான் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மக்களின் ஆதரவு நன்கு கிடைத்துவரும் அமீர் இனி விளையாட்டில் கவனம் செலுத்தினால் சிறப்பு.
அதிரடியான பாடலுக்கு நடனமாடிக்கொண்டே வேற லெவல் என்ட்ரி கொடுத்தனர் அமீரை தத்தெடுத்துக்கொண்ட குடும்பம். ஏற்கெனவே தன்னுடைய தாயின் இழப்பு பற்றியும், அமீரை பார்த்துக்கொண்டு குடும்பத்தைப் பற்றியும் தான் கடந்து வந்த பாதையில் பகிர்ந்துகொண்டது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், அமீர் சார்பாகத் தன்னை தத்தெடுத்த குடும்பம்தான் வரும் என்பது நம் எல்லோருடைய எதிர்பார்ப்பதாகவும் இருந்தது. அந்த எதிர்பார்ப்பு, நினைத்ததைவிட அதிகமாகப் பூர்த்தி செய்யப்பட்டது.
இரு குழந்தைகளும் அமீர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர் என்பது நேற்றைய எபிசோடில் வெளிப்பட்டது. மேலும், தனக்கான அடையாளத்தைக் கொடுக்க காரணமாக இருந்த ஷாயிஜி அமீருக்கான ஹின்ட்களை வார்னிங்கோடு கொடுத்தார். பிறகு, அமீரின் தாயின் பிறந்தநாளை கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடவும் செய்தனர். அமீருடைய தாய் தன் பக்கத்திலேயே நின்று இவருடைய இந்த அழகிய தருணங்களைக் கண்டு ரசித்துக்கொண்டிருப்பார் என்கிற ஆதங்கம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.
இதனைத் தொடர்ந்து அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல், சென்ற வாரத்தில் தங்களின் குடும்பங்களின் வருகையை பற்றிதான் டிஸ்கஸ் செய்தனர். அதனால், பெரிதாக கன்டென்ட் என்று எதுவுமில்லை. ஆனால், ஒவ்வொரு போட்டியாளரின் பாசிட்டிவ் - நெகட்டிவ் விஷயங்களைத் தனியே கன்ஃபெஷன் அறையில் பகிர்ந்துகொள்ள உள்ளேன் என்றபடி ஒவ்வொரு போட்டியாளரும் கமல்ஹாசனோடு தனியே உரையாடினார்கள். இந்த பகுதி ஏன் என்பது கடைசி வரை தெரியவில்லை.
ஆம், மற்ற போட்டியாளர்கள் முன்பு என்ன பேசுவாரா அதையேதான் கன்ஃபெஷன் அறையிலும் பேசினார் கமல். அதுமட்டுமின்றி, இவர் சொல்லுவதற்கு முன்பே, அவர்களை அலெர்ட் செய்துவிட்டுச் சென்றனர் அவரவர்களுடைய குடும்பத்தினர். இதில் புதிதாக எதுவுமில்லை. மொத்தத்தில் நேற்றைய எபிசோட் எதற்கு என்றே தெரியவில்லை.
இறுதியாக சாண்டா தாத்தாவை பரிசுகள் கொடுக்கச் சொல்லி, அதனை உடனேயே பிரித்தும் பார்க்கச் சொன்னார் கமல். அப்போது பிரியங்கா காப்பாற்றப்பட்டார் என்கிற சர்ப்ரைஸோடு நேற்றைய எபிசோட் இனிதே நிறைவடைந்தது. இன்று ஒரு எவிக்ஷன் அல்ல இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப்போகிறார்கள் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. அவர்கள் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil