scorecardresearch

நிரூப்பை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்.. கடையில் சாணியில் அபிஷேகம்!

Bigg Boss 5 Tamil Niroop Priyanka Ameer Ciby Pavani Thamarai Tamil News அப்படி என்றால் இதற்கு முன்பு விளையாடிய டாஸ்க்குகளில் எல்லாம் பிரியங்கா நிரூப்பிற்காக விட்டுக்கொடுத்திருக்கலாமே.

Bigg Boss 5 Tamil Niroop Priyanka Ameer Ciby Pavani Thamarai Tamil News
Bigg Boss 5 Tamil Niroop Priyanka Ameer Ciby Pavani Thamarai Tamil News

Bigg Boss 5 Tamil Niroop Priyanka Ameer Ciby Pavani Thamarai Tamil News : யார் இம்முறை பணத்தை எடுத்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒருவர் வெளியேறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இப்போதாவது கொஞ்சம் கடினமான டாஸ்க் வைக்கலாம் என்று நினைத்த பிக் பாஸ், ரூம் போட்டு யோசித்து சில டாஸ்க்குகளை வைத்து, அதிலும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

காலை எழுந்ததுமே முந்தைய தினம் வைக்கப்பட்ட 3 லட்சம் 5 லட்சமாக அதிகரித்திருந்தது. அதனை சுற்றிச் சுற்றி அனைவரும் ஆட, எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் என்றபடி உள்ளே சென்றனர். பிறகு, வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை, எல்லாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்றபடி ராஜு உத்தரவிட, தாமரை, பிரியங்கா, பாவனி ஆகியோர் ரெஸ்ட் எடுக்கச் சென்றனர். அப்போதும், அம்மா போல எனக்கூறி வேலைகளை செய்யப்போனால் நடக்கிறதே வேற என்று தாமரையை எச்சரித்தார் பிரியங்கா.

இதையடுத்து, 6 லட்சமாக தொகை அதிகரித்தது. இதற்குமேல் தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது, அதனால் உழைத்து சம்பாதித்துக்கொள்ளலாம். கோடி ரூபாய் வைத்தாலும் இந்த வீட்டை விட பணம் தனக்கு முக்கியமல்ல என்று தாமரை நிரூப்பிடம் சொன்னது உண்மையில் பாராட்டுக்குரியது. இந்த தன்னம்பிக்கை நிச்சயம் தாமரையை அடுத்தடுத்த நல்ல நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், பாவனி அங்கிருக்கும் சூழ்நிலையை மிகச் சரியாகக் கணித்துக்கொண்டிருந்தார். ஆம், 15 லட்சம் வைத்தால் அதை எடுத்துக்கொண்டு தான் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், எப்படியும் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள். வெற்றிபெறும் வாய்ப்பு யாருக்குக் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் இந்த தொகையை எடுத்துக்கொண்டு செல்வது புத்திசாலித்தனம்தான் என்று கூறியது ஸ்மார்ட் சிந்தனை. ஆனால், இவருக்கு முன்பு வேறொருவர் முந்திக்கொண்டார் என்பது கசியும் தகவல்கள்.

இதையடுத்து வந்தது போன் டாஸ்க். தியாகமா, சவாலா என்கிற புதுவிதமான டாஸ்க். இதில் முதலில் சிக்கிய பலி ஆடு நிரூப். வீட்டில் இருக்கும் சர்க்கரை, உப்பு மற்றும் வெங்காயத்தை ஸ்டார் ரூமில் வைத்துவிடவேண்டும் என்பது இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தியாகத்திற்கான டாஸ்க். என்ன பதற்றத்தில் நிரூப் இருந்தாரோ தெரியவில்லை, அவசர அவசரமாக எதையோ செய்யப் போய், இறுதியில் சண்டையில் முடிந்தது.

அமீருக்கு நிரூப் மீது அப்படி என்ன கோபமோ, சாதாரணமாகப் பேசினாலும் சண்டையில் முடிந்துவிடுகிறது. நிரூப்பிற்காக டாஸ்க் செய்ய முடியும் ஆனால், லக்ஜூரி பட்ஜெட்டுக்காக எல்லாம் முடியாது என்று பிரியங்கா கூறுவதில் என்ன லாஜிக் உள்ளது? அப்படி என்றால் இதற்கு முன்பு விளையாடிய டாஸ்க்குகளில் எல்லாம் பிரியங்கா நிரூப்பிற்காக விட்டுக்கொடுத்திருக்கலாமே. மொத்தத்தில் நிரூப்பை ஓரம் கட்டவேண்டும் என்று நினைத்து இந்த வேலைகள் எல்லாம் செய்தது போன்று இருந்தது.

வழக்கம் போல ராஜு பொறுமையாக இந்த சூழ்நிலையை சமாளிக்க, சண்டை தணிந்தது. நிரூப் சொன்னதையேதான் சிபியும் கூறினார். ஆனால், அதை மட்டும் அனைவரும் வழிமொழிந்தனர். என்னங்க சார் உங்க சட்டம்! அதுமட்டுமா? தண்ணீரில் உப்பைக் கரைத்து வைத்துக்கொண்டதும், சர்க்கரையை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்வதும் எனப் போட்டியாளர்களும் சில ராஜதந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். சிறப்பு. இறுதியாக சாணியைக் கரைத்து, தங்கள் மீது ஊற்றிக்கொள்ளவேண்டும் என்கிற டாஸ்க் வைத்தபோது, அனைவரும் ஒன்றுகூடி, சாணியை ஊற்றிக்கொண்டனர். இப்படி சில நல்ல விஷயங்களோடு நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 5 tamil niroop priyanka ameer ciby pavani thamarai tamil news

Best of Express