Bigg Boss 5 Tamil review Kamal Hassan Isaivani Priyanka Thamarai Niroop : அபிஷேக்கின் வைல்டுகார்டு என்ட்ரி முதல் தாமரையின் அசத்தலான நெத்தியடி பதில்கள் வரை எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக இல்லை என்றாலும் நேற்றைய எபிசோட் சற்று சுவாரஸ்யமாகவே நகர்ந்தது. என்னதான் ஆச்சு அபிஷேக்கிற்கு? பார்ப்போம்…
கமலின் எபிசோடான நேற்று, எடுத்த எடுப்புலேயே பிக் பாஸ் சீசன் 5 பற்றி அங்கிருந்த மக்களின் மனநிலையைக் கேட்டறிந்து கொண்டபிறகு, வெள்ளிக்கிழமை எபிசோடை காண்பித்தனர். அதில்தான் அபிஷேக்கின் ஸ்பெஷல் என்ட்ரி இருந்தது. தொடக்கத்தில் அடுத்த வாரத்தின் கேப்டன்சி தேர்வு போட்டிகள் முடிந்தவுடன், லக்ஜுரி பட்ஜெட் பொருள்களை வித்தியாச முறையில் அனுப்பியிருந்தார் பிக் பாஸ். மாபெரும் பரிசுகள் பெட்டி போல தயார் செய்து, அதனுள் பொருள்களை வைத்து அனுப்பியிருந்தார் பிக் பாஸ். அந்த வரிசையில் அபிஷேக்கும் ஒரு பரிசாக உருமாறி பாட்டன் வெளியே வந்தால்.
அபிஷேக்கை பார்த்ததும் பாவனிக்கும் பிரியங்காவிற்கு என்ன ஒரு ஆனந்தம். அப்படியே வாயடைத்து நின்றார் பிரியங்கா. ஆனால், அபிஷேக்கின் இந்த திடீர் என்ட்ரி, ஆண் போட்டியாளர்களைத்தான் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பிரியங்காவிடம் நெருக்கமாகிக்கொண்டு வருகிறார் ராஜு. 'அதற்குள் இவன் வந்துட்டான்' என்கிற மைண்ட் வாய்ஸை சத்தமாக அண்ணாச்சியிடம் ஷேர் செய்துகொண்டிருந்தார் ராஜு. ஆனால், தனக்கு எந்த ஒரு உணர்வும் அபிஷேக் வீட்டை விட்டு சென்றபோதும் இல்லை, திரும்ப வந்தபிறகும் இல்லை என்று கூறினார் அண்ணாச்சி.
அபிஷேக்கை வரவேற்கப் பழைய தக்காளி, சாதம் என வேற லெவல் ரெசிபியை அவர் மீது ஊற்றி அபிஷேகம் செய்வதற்குத் தயாரித்துக்கொண்டிருந்தனர் மற்ற போட்டியாளர்கள். இவ்வளவு நடந்தும், நம்ம அபிஷேக்கா இது என்று கூறும் அளவிற்கு மிகவும் அமைதியாக வலம்வந்துகொண்டிருந்தார் அபிஷேக். இந்த அவதாரம் இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ! இப்போதைக்கு லிசனிங் மோடில் இருக்கும் அபிஷேக், திங்கள்கிழமையிலிருந்து வேறொரு அவதாரத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேலாவது ஆட்டம் சூடு பிடிக்குமா?
இதனைத் தொடர்ந்து அகம் டிவி வழியே வீட்டிற்குள் வந்த கமல், பிரியங்காவின் கேப்டன்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். உண்மையில் மற்ற வாரங்களைவிட, இந்த வாரத்தின் கேப்டனின் செயல்பாடாக இருக்கட்டும் அல்லது ஆளுமை வருணின் டாஸ்க்காக இருக்கட்டும், இருவரின் பங்களிப்பும் மிகச் சிறப்பாகவே இருந்தது. சென்ற வாரம் நடைபெற்ற பிம்பங்கள் பேசும் டாஸ்க்கில் பூசி மொழுவி பேசிய ப்ரியங்காவிடம் இன்னும் வெளிப்படையாக பேசலாமே என்று மீண்டும் ஒரு வாய்ப்பளித்த கமல், அதனை தாமரை சிறப்பாக சொல்லியிருப்பார் என்று அவரே வாய்க்கொடுத்து, பிரியங்காவை பற்றிய கணிப்புகளை புட்டு புட்டு வைத்தார்.
பிறகு, பிரியங்கா பற்றி நிரூப் சொன்ன விஷயங்கள், 'நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்' என்கிற மைண்ட் வாய்ஸை வரவைத்திருக்கும். இவ்வளவு நாள் ஒன்றாகப் பழகிவிட்டு, இப்போது அதெல்லாம் உண்மைதானா என்கிற கேள்வியை முன்வைக்கும்போது, இதயம் வெடித்துச் சிதறத்தானே செய்யும். என்ன செய்வது! இதனை அபிஷேக் வெளியே சென்று பிரியங்காவிடம் லைட்டாக கொளுத்திப் போட்டது சிறப்பான சம்பவம். சாந்தமாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அபிஷேக். வாழ்த்துகள்!
அக்ஷராவுடனான சண்டைக்குப் பிறகு சிபி அமைதியானதை எடுத்துக் கூறியதற்குக் கமலுக்கு நன்றி. இந்த சீஸனின் கடுமையான போட்டியாளர் இப்படி அமைதியாகிவிட்டால் என்னதான் செய்வது! இனி வரும் வாரங்களில் சிபியின் கேம் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இறுதியாக, நாணயம் வைத்திருப்பவர்கள், ஏன் அந்த நாணயத்தைப் பயன்படுத்தவில்லை என்று கமல் கேள்வி கேட்டதற்கு, மக்கள் மீது நம்பிக்கை உண்டு என்று அனைவரும் ஒன்றாக பதில் அளித்தனர். இதில் மட்டும்தான் ஒற்றுமை! இப்படிக் கூறிய அனைவரையும் காப்பாற்றிவிடவில்லை மக்கள், பாவனியைத் தவிர. ஆம், நேற்றைய எபிசோடில் பாவனி மட்டுமே காப்பாற்றப்பட்டார்.
என்னதான் சொல்லுங்க, சண்டைபோடுகிறார்களோ அவர்களிடம் கொஞ்சம் உஷாராகதான் இருக்கவேண்டும். நமிதா, சுருதி என அந்த வாரத்தில் தாமரையுடன் சண்டைபோட்டு வெளியேறியவர்கள் வரிசையில், இம்முறை இசைவாணி இணைந்திருக்கிறார். தாமரை மீண்டும் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் மலருகிறது!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil