Advertisment

அபிஷேக்கின் புது உருட்டு.. பிரியங்காவின் பக்கா பிளான்!

Bigg Boss 5 Tamil Review Priyanka Abishek Ciby Raju இரு அணிகளும் ரூல்ஸ் புத்தகத்தை ஒழுங்காகப் படிக்காத காரணத்தினால், ஆங்காங்கே சில தவறுகள் செய்தனர்.

author-image
priya ghana
New Update
Bigg Boss 5 Tamil Review Priyanka Abishek Ciby Raju

Bigg Boss 5 Tamil Review Priyanka Abishek Ciby Raju

Bigg Boss 5 Tamil Review Priyanka Abishek Ciby Raju : 'சமூக வலைத்தளத்தில் டார்ச்சர் தாங்க முடியல.. ஒரு மன்னிப்பு கேட்டுருப்பா' என்று பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் கொடுத்ததை அடுத்து, ஒரு வாரத்திற்குப் பிறகு அபிநய் மற்றும் பாவனியிடம் மன்னிப்பு கேட்டார் ராஜு. அதிலும், தனக்குச் சின்ன புத்தி இருந்த காரணத்தினால் இப்படி தவறான கேள்வியைக் கேட்டுவிட்டதாகவும் நாமினேஷனுக்கு முன்பு மன்னிப்பு கேட்டிருந்தால் அதற்காக இறங்கி வந்து பேசுவதுபோல் தோன்றும் என்பதனால் கொஞ்சம் தாமதமாக மன்னிப்பு கேட்பதாகவும் ராஜு கூறிய எக்ஸ்ட்ரா பிட், வேற லெவல். எது எப்படியோ, இந்த சலசலப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். அடுத்ததாக செய்தி ரிப்போர்டிங் என்கிற பெயரில் நேற்று வீட்டினுள் ஏதேதோ செய்தார்கள். பார்ப்போம்...

Advertisment

ராஜு மன்னிப்பு ஒரு பக்கம் என்றால், அபிஷேக்கின் சகுனியாட்டம் மற்றொரு பக்கம். பிரியங்காவுடன் சண்டை செய்தால் அண்ணாச்சி நன்கு தெரிவார் என்பதனால் வேண்டுமென்றே சண்டைபோடுகிறார் என்று புதிதாக ஒரு உருட்டை பிரியங்காவிடம் உருட்டிக்கொண்டிருந்தார் அபிஷேக். தன்னைப் பற்று புகழ்ந்து பேசுகிறாரா இல்லை இகழ்கிறார என்று தெரியாத குழப்பத்திலேயே எல்லாவற்றுக்கும் 'ஆமா சாமி ' போட்டுக்கொண்டிருந்தார் பிரியங்கா. எங்கே செல்லும் இந்த பாதை..?

இந்த ஷாக் முடிந்து, விடிந்ததும் மற்றொரு ஷாக். முதல் நாள் சரமாரியாக வார்த்தை சண்டையில் ஈடுபட்ட அண்ணாச்சி, நிரூப், பிரியங்கா என அனைவரிடமும் அவர்கள் மனது புண்படும்படி ஏசியிருந்தால் 'சாரி' என்று கேட்டார். அதுசரி, இன்னிக்கு அடித்துக்கொள்வதும் நாளை ஒட்டிக்கொள்வதும் பிக் பாஸ் வீட்டில் சகஜம்தானே. நமக்குதான் என்ன நடந்தது என்று புரியாது. நமக்கு ஏற்றபடி கதையை அமைத்துக்கொள்ள வேண்டியதுதான். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை செய்தியாக சேகரித்து, நியூஸ் சேனல் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்தும் லக்ஜூரி டாஸ்க்.

இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படவேண்டும் என்று சொன்னதுமே, தங்களுக்கான டீமை தேர்வு செய்துகொண்டனர். சஞ்சீவ் நடுவராக இருக்க, அபிஷேக் அணி ஒரு பக்கமும் அண்ணாச்சி அணி மற்றொரு பக்கமும் பிரிந்தனர். இரு அணிகளும் ரூல்ஸ் புத்தகத்தை ஒழுங்காகப் படிக்காத காரணத்தினால், ஆங்காங்கே சில தவறுகள் செய்தனர். அவை அனைத்தையும் மிகச் சரியாகத் தொகுத்து சரியான மதிப்பெண்களோடு வெற்றியாளர்களையும் அறிவித்தார் சஞ்சீவ்.

முந்தைய நாள் அண்ணாச்சிக்கும், நிரூப்பிற்கும் இடையே நடந்த மோதல், தாமரை மற்றும் பிரியங்காவின் வாக்குவாதங்கள், பாவனியின் நிலைப்பாடு என மிகவும் தீவிரமாக செய்திகளை சேகரித்து, ஆராய்ந்து, அதனைக் காணொளி வடிவில் பிளே ஆகவேண்டும் என்று அதே சம்பவங்களை மீண்டும் உருவாக்கி நடித்தும் காட்டினார்கள் அபிஷேக் அணி. இதில், பிரதான கதாபாத்திரமாக இருந்தது அபிஷேக். யாரை என்ன கேள்வி கேட்கவேண்டும், ஒவ்வொருவரையும் எந்த அளவிற்கு பேச விடவேண்டும், எப்படி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்பவேண்டும் என்று அனைத்தையும் அறிந்து அதன்படியே தன் அணியை வழிநடத்தினார் அபிஷேக். இடை இடையே சிபியின் சில நச் பாயின்ட்டுகளும் அருமையாகவே இருந்தன.

அபிஷேக் அணியை ஒப்பிடுகையில் அண்ணாச்சி அணியில் நகைச்சுவை தூக்கலாக இருந்ததே தவிர கன்டென்ட் அவ்வளவாக இல்லை. அதனை அந்த அளவிற்கு சுவாரசியமாக ப்ரெசன்ட் செய்கிற அளவிற்கு ராஜுவைத் தவிர யாருமில்லை.  என்றாலும், நடுவராக சஞ்சீவினின் கவனமும் கணிப்பும் மிகச் சரியானதாக இருந்தது. போகிறபோக்கில், தாமரையை வெளிப்படையாகப் பிரியங்கா கலைத்துவிட்டு பிறகு தாமரைக்கு முத்தமிட்டது, பார்க்கும் நமக்கே 'இது என்னடா உலக மகா நடிப்பா இருக்கு!' என்கிற ஃபீல் வரும்போது, தாமரை பாவம் குழம்பிப்போகத்தானே செய்வார்!

தாமரையைப் பற்றி ஸ்க்ரிப்ட் எழுதும் வேளையில், தன் பார்வையில் தாமரை மற்றும் பிரியங்கா இருவருமே வில்லன்கள்தான் என்று சிபி கூறியது மிகச் சிறப்பு. மேலும், நிரூப் - அண்ணாச்சி பற்றிய ஸ்க்ரிப்டில் நிரூப்பின் சம்பந்தத்தைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று நடுநிலையாக சிபி கூறிய பிறகு, நிரூப்பிற்கு அவ்வளவாக அதில் நாடாம் இல்லாமல் இருந்தது வெளிப்பட்டது. ஆங்காங்கே கொளுத்திப்போட்டாலும், நல்ல வெடியாகவே இருக்கிறது சிபி பட்டாசு.

பாவனியை பிடிக்காது என்று வெளிப்படையாகத் தாமரை சொன்னது, வாக்குவாதத்திற்கு இடையே 'உங்க ஐக்கி' என்று நிரூப்பிடம் பிரியங்கா சொன்னது என சில பல உண்மைகளும் அவ்வப்போது வெளியே வந்தது. ஆராய்வதற்குள் பாவனி - தாமரை சண்டை, இடையில் பிரியங்காவை இழுத்தது என அடுத்தடுத்து சண்டைகளோடு மிகவும் பரபரப்பாக நகர்ந்தது.

இறுதியாக அபிஷேக் அணி நன்றாக பெர்ஃபார்ம் செய்தது என்று சஞ்சீவ் கூற, அதைப்பற்றிய விவாதத்தில் எதிரணி ஈடுபட்டது. அப்போது ஏன், எதற்கு என்று சரியாக புரியாமல் 'இப்படி டீம் பிரித்தது தவறு' என்று சட்டென கோபித்துக்கொண்ட அண்ணாச்சியைப் பார்த்து அமீர் வெகுண்டெழுந்தார். இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் இடத்தை எப்போது நிரப்புவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment