Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Annachi Thamarai
Bigg Boss 5 Tamil Review Priyanka Raju Annachi Thamarai : ஒரு மணி நேரம் எபிசோடுலேயே கன்டென்ட் கிடைக்காமல் அல்லாடும் பிக் பாஸ், நேற்று தீபாவளி ஸ்பெஷல் என 4 மணிநேரம் எபிசோடை ஒளிபரப்பியது. சிரிப்பு, அழுகை, தவிப்பு உள்ளிட்ட எல்லா வகையான உணர்வுகள் இருந்தாலும், பிக் பாஸ் கன்டென்ட் மிஸ்ஸிங். 'வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன்' என்கிற பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. சரி விடுங்க.. தீபாவளி அதுவுமா இப்படி நம்ம பிக் பாஸை கஷ்டப்படுத்தக்கூடாது. என்னனென்ன அட்ராசிடிக்கள் இந்த நான்கு மணிநேரத்தில் நடைபெற்றது என்பதைப் பார்க்கலாம் வாங்க...
Advertisment
வழக்கத்திற்கு மாறாக 6 மணிக்கெல்லாம் அலறவைத்தார் பிக் பாஸ். 'தீபாவளி நீதாண்டி..' பாடல் ஒலிக்க, அனைவரும் எழுந்து விறுவிறுவென தயாராகினர். அக்ஷரா மற்றும் தாமரை இணைந்து கோலம் போட, அம்மாவிடம் நெருக்கமாக இருந்த பிரியங்கா, அவரை நினைத்துக் கண்கலங்கினார். இதனைத் தொடர்ந்து, சென்ற வாரத்தின் கலக்கல் பெர்ஃபாமர்களாக இருந்த மதுவையும் ராஜூவையும் தனியே அழைத்து அவர்களுக்கு ட்ரீட் என்கிற பெயரில் ஒரு சவாலை முனவைக்க, மறுபக்கம் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு வேறு விதமான சவாலை முன்வைத்தார்.
ராஜுவின் ட்ரெஸ்ஸை மாற்றவேண்டும், மதுவை மீண்டும் குளிக்க வைக்கவேண்டும், நிரூப்பின் நீண்ட கூந்தலுக்கு மது சிக அலங்காரம் செய்துவிடவேண்டும் மற்றும் ராஜூவை மிமிக்ரி பண்ண வைக்கவேண்டும் என இப்படி சில சுவாரசியமான சவாலான டாஸ்க்கை பிரியங்கவிடம் கொடுத்தார் பிக் பாஸ். அதனை மிகவும் எளிதாகச் செய்து முடித்தார் பிரியங்கா. ஆனால், ராஜூவை உடை மாற்ற வைப்பதற்குள் பல ஒரு வழி ஆகிவிட்டனர் பிரியங்கா மற்றும் தாமரை ஜோடி. சீறிக்கொண்டு வந்த கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு கன்ட்ரோல் செய்து கொண்டிருந்தார் ராஜு. வந்த நாள் முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கரைத்துக்குடித்து வந்தது போல இருக்கிறார். அதுனாலயே பல இடங்களில் தன்னுடைய எமோஷன்களையெல்லாம் அடக்கிக்கொள்கிறார். இதுலாம் நல்லதுக்கில்லை ராஜு.
Advertisment
Advertisements
அடுத்ததாக மதுரை முத்துவின் பட்டிமன்ற நிகழ்வு. பிக் பாஸ் வீட்டில் சந்தோஷத்திற்குக் காரணம் ஆண்களா பெண்களா என்கிற தலைப்பில், வீட்டில் உள்ள அனைவருமே பேசினார்கள். நகைச்சுவையோடு மிகவும் நன்றாகவே ஒவ்வொருவரும் தங்களின் பாயின்ட்டுகளை முன்வைத்தனர். அதில் சிறப்பாக ராஜு, பிரியங்கா மற்றும் தாமரை பேசினர். இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவருக்கு, அவரவர்களின் குடும்பத்தினர் அனுப்பிய ஸ்பெஷல் உணவு அனுப்பப்பட்டது. கூடவே அவர்களுக்கான சிறிய மெசேஜும் அனுப்பப்பட்டது. இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கப்போகிறது என்று கேட்டதுமே, பிரியங்கா உட்பட சிலர் உடைந்து அழத் தொடங்கினார்கள்.
பிறகு சூப்பர் சிங்கர் பேண்ட் என்ட்ரி கொடுக்க, தன்னுடன் நீண்ட நாள்கள் பயணித்த மாகாபாவை பார்த்ததுமே மீண்டும் உடைந்து அழுதார் பிரியங்கா. நேற்றைய தினம் முழுக்க கண்ணீரிலேயே மூழ்கினார் பிரியங்கா. பிறகு கலக்கப்போவது யாரு பாலாவின் காமெடி, விளக்கேற்றியும், லேன்டர்ன் பறக்க விட்டும் தங்களின் தீபாவளி திருநாளை நன்றாகவே கொண்டாடினார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
ஆனால், இந்த நாளிலும் தாமரை மற்றும் அண்ணாச்சிக்கு சிறிய வாக்குவாதம் வந்தது. தாமரையின் கணவர் அழகாக இருப்பதாக அண்ணாச்சி சொன்ன கமென்ட்டில் இருந்து ஆரம்பமானது அந்த சண்டை. உடல் மற்றும் உருவ கேலி செய்தது தவறுதான். ஆனால், இதையேதான் பாலாவும் செய்து காட்டினார். ஆனால், அதை மட்டும் அனைவரும் ரசித்தனர். என்ன உலகம் இது! சரி கொண்டாட்டங்கள் எல்லாம் ஓவர் ஓவர்... வீட்டில் இதுவரை நடந்த பஞ்சாயத்தை எல்லாம் மறந்துவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக நேற்று பண்டிகையைக் கொண்டாடியது சிறப்பாகவே இருந்தது. இந்த நிலை இன்று நிச்சயம் மாறப்போகிறது. ஆனால், எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil