பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இன்று வெளியேறப் போவது யார்? என்பதெல்லாம் இருக்கட்டும். அதற்கு முன் ஒரு சுவாரஸ்ய வேலை செய்திருக்கிறது பிக்பாஸ்.
சுவாரஸ்யம் எனில், போட்டுக் கொடுத்தல்...
ஆம்! பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் உட்காரவைத்து, உங்களைப் பற்றி மற்றவர்கள் அடித்த கமெண்ட் ஒன்றை நான் சொல்வேன். அது யாராக இருக்கக் கூடும் என்பதை சம்பந்தப்பட்ட நபர் கண்டறிய வேண்டும் என்பதே அந்த டாஸ்க்.
சில போட்டியாளர்கள் அப்போதைய சூழலில் மற்றவர்களை பற்றி அடித்த கமெண்ட்ஸ்களை, சற்று விவகாரமான கமெண்ட்ஸ்களை கமல்ஹாசன் படிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு போட்டியாளரின் முகத்திலும், 'இது லிஸ்ட்லயே இல்லையே' பீலிங்...
நம்ம சித்தப்பு வேற அப்பப்போ அவரு ஸ்டைல ஏகப்பட்ட ஒன்லைன் கமெண்ட்ஸ் அடிச்சிருக்காரு!! சரவணன் மட்டுமல்ல, கவின் தொடங்கி சாக்ஷி வரை அனைவருக்கும் இன்று டர்ர் இருப்பது கன்ஃபார்ம். வசமா போட்டு கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்....
சரி... இப்போ எவிக்ஷன்.... யாரா இருக்கும்??? அதான் ஊரே சொல்லுது மோகன் வைத்யா என்று!!
பட்! எதிர்பார்த்தது இல்லாமல் எதிர்பார்க்காததை கொடுப்பது தானே பிக்பாஸ்!! பொறுத்திருந்து பார்ப்போம்.