மக்கள் பரபரப்பாக காத்திருக்கும் பிக் பாஸ் 2 எவிக்ஷன் இன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இன்றைய எவிக்ஷன் வித்தியசமாக நடக்க இருக்கிறது.
பிக் பாஸ் 2 : மகத் வெளியேற்றமா?
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்றைய நிகழ்ச்சயில் இத்தனை நாட்கள் மக்கள் வேண்டும் என்று கேட்ட நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் மகத் செய்யும் எண்ணற்ற தவறான செயல்கள் அனைத்திற்கும் நேற்று சிறப்பான தாளிப்பு நடந்தது.
August 2018
மகத் செய்த தவறுகளை கடுங்கோபத்துடன் கமல் ஹாசன் சுட்டிக் காட்ட, மும்தாஜ் நடந்துக்கொண்ட முறை தான் நல்ல செயல் என்று பாராட்ட, மக்கள் கரங்கோஷங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறும் மகத்... பாலாஜி கொடுத்த அறிவுரை!!
இந்நிலையில், இன்று நடைபெற இருக்கும் எவிக்ஷன், வழக்கத்தை விட மாறாக நடைபெறுகிறது என்று கமல் நேற்று தெரிவித்தார். அதாவது எவிக்ட் ஆவர்களின் பெயர், வெள்ளை அட்டையில் எழுதாமல், சிவப்பு அட்டையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.
சிவப்பு நிறத்தில் எவிக்ஷன் கார்டு
இதையடுத்து இன்று காலை வெளியாகியுள்ள புரொமோவில், ‘ கண் சிவந்தால் கார்டும் சிவக்கும்’ என்று கமல் கூறினார். அதற்கு அர்த்தம் ஆத்திரத்தில் மகத் நடந்துக் கொண்டதை குறிக்கிறது.
August 2018
வெகு நாட்களாக இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள், “மகத்தை வெளியே அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று கொந்தளித்து வந்தனர். மக்களின் இந்த எதிர்ப்பார்ப்பு இன்று பூர்த்தியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.