பிக்பாஸ் சீசன் 9: கேள்வி கேட்ட விஜய் சேதுபதி; அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்த திவாகர்

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 28-ஆம் நாளின் ப்ரொமோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 28-ஆம் நாளின் ப்ரொமோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
DIWA

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 20 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் திரைப்பிரபலங்களுக்கு பதிலாக சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் பிரச்சனையை தாரக மந்திரமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

Advertisment

எதற்கெடுத்தாலும் சண்டை, என்ன செய்தாலும் சண்டை என்ற லெவலில் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் நிகழ்ச்சியா? இல்லை சவுண்ட் பாக்ஸ் நிகழ்ச்சியா? என்ற ரேஞ்சிற்கு மக்கள் கடுப்பில் உள்ளனர். இந்த வீட்டில் எப்போதும் சண்டை மட்டும் தான் இருக்குமா? சந்தோசமான நிகழ்வுகள் நடக்கவே நடக்காதா? என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகம் கண்டெண்ட் கொடுப்பதே வி.ஜே.பார்வதி தான் இவர்கள் இல்லாமல் இந்த 20 நாட்களில் எந்த ப்ரொமோவும் வருவதில்லை. எப்ப பார்த்தாலும் சண்டை என்று அதிருப்தி அடைந்த மக்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக  போட்டியாளர்கள் 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகள் எல்லாம் விளையாடினர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பதிவிட்டு வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே., ஆதிரை ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் விதமாக தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே இறங்க உள்ளனர். முன்பு 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள். ஆனால், தற்போது 30 நாட்கள் முடிவடையாத நிலையில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே செல்ல உள்ளனர்.

Advertisment
Advertisements

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 28-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், மேடைக்கு வந்த வைல்டு கார் போட்டியாளரான சாண்ட்ரா, குரூப் இருக்கு உள்ள அத உடைத்தால் அவர்களுடைய ஸ்டார்டஜி என்னவென்று எங்களுக்கு தெரியும் என்றார். உள்ளே கால் எடுத்து வைத்ததும் எல்லோரையும் தரதரவென்று கிளிக்கபோறொம் என்று பிரிஜின் கூறினார். உள்ளே இருக்கும் போட்டியாளருக்கு கிளாஸ் எடுக்க வேண்டும் என்ரு திவ்யா கூறினார்.  நான் வாய்சவுடால் விடமாட்டேன் செஞ்சி காட்டுவேன் என்று அமித் கூறுகிறார்.இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த ப்ரொமோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இரண்டாவது ப்ரொமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த திவ்யா, எல்லோருக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது அல்லவா, அது எல்லாம் எங்க போச்சு? வெளியில் பார்வதி என்றால் இப்படி தான் பேசுவார் என்று தெரிகிறது. என்ன கேள்வி கேட்க வேண்டும். என்ன கேட்கக் கூடாது? அது எல்லாம் எங்க போச்சு பார்வதி? இங்க இருக்கும் எல்லோருக்கும் ஏதோ ஒரு தகுதி இருக்கிறது என்பதால் தான் இங்கு இருக்கிறோம். அப்படி தகுதி இல்லையென்றால் இப்பவே பிக்பாஸ் கிட்ட சொல்லிட்டு நீங்க வெளியே போகலாம் என்கிறார். இத்துடன் இந்த ப்ரொமோ  முடிவடைகிறது.

மூன்றாவது ப்ரோமோவில், அந்த கேப்டன்ஸி ஆர்மி கேம்ப்பா? அல்லது என்.எஸ்.எஸ் கேம்பானு? தெரியல என்று விஜய் சேதுபதி சொல்கிறார். தொடந்து பேசிய திவாகர் பிரவீன் ராஜ் தெரிந்தவர்களுக்கு ஒரு மாதிரியும் தெரியாதவர்களுக்கு ஒரு மாதிரியும் தான் பிரச்சனையை ஹேண்டில் செய்தார். அவரது பார்வையை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று வியானா அவரது மனக்குமுறலை எடுத்து வைத்தார் என்றார்.

biggboss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: