/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-09T112452.635.jpg)
biggboss Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 37 நாட்கள் ஆகியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக நட்சத்திரமும் மாடலுமான நதியா சாங், பிரபல யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா மற்றும் நாட்டுப்புற பாடகர் சின்ன பொண்ணு ஆகியோர் குறைந்த வாக்குகள் காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-09T113408.939.jpg)
இந்நிலையில், சுருதி கடந்த வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த வார தொடக்கத்தில், வருண் தனது நாணயத்தைப் பயன்படுத்தி சிபி கேப்டனாக மாறுவதற்கு உதவினார். நிரூப்பின் 'பூமி' நாணயம் வீட்டிற்குள் பல புதிய விதிகள் உருவாக்கப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/tamil-indian-express-2021-11-09T113421.552.jpg)
போட்டியாளர்களும் தீபாவளியை பல டாஸ்க்குகள் மற்றும் விளையாட்டுகளுடன் கொண்டாடினர். பவானி ரெட்டி, அக்ஷரா, சுருதி, இசைவாணி, இமான், அபினய் வட்டி, சிபி, இக்கி பெர்ரி, நிரூப் மற்றும் மதுமிதா ஆகிய ஒன்பது போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில், இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி ஆகியோர் சனிக்கிழமை எபிசோடில் காப்பாற்றப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Screenshot-2021-11-09-at-11.36.38-AM.png)
நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனின் பிறந்தநாளில், போட்டியாளர்கள் பாடல் பாடி, கேக் வெட்டி பிறந்தநாளில், எலிமினேஷன் மற்றும் டாஸ்க் அமைக்கப்படும் என்று கமல்ஹாசன் மீண்டும் கூறினார். வருணிடம் ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டிருந்த பால் நிரப்பப்பட்ட பாட்டில்களைக் கொண்டு வரச் சொன்னார்கள். பாட்டில்களில் பாலை ஊற்றுமாறு கேப்டன் வருணிடம் கமல் கேட்டுக் கொண்டதால், பாட்டில்களில் தெரியும் பெயர்களின் வரிசையின் அடிப்படையில், போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/Screenshot-2021-11-09-at-11.37.06-AM.png)
அந்த வகையில், சிபியை தொடர்ந்து அக்ஷரா ரெட்டி, பவானி ரெட்டி, மதுமிதா, ஐக்கி பெர்ரி ஆகியோர் அன்றைக்கு காப்பாற்றப்பட்டனர். பின்னர், நிகழ்ச்சியில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்டதை கமல் வெளிப்படுத்தினார், மேலும் தாமரை செல்வியிடமிருந்து வாங்கிய நாணயத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கூறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள சுருதி தற்போது வீடியோவை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய பிறந்த நாளில் இருந்து புதிய லைஃப் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கும் ரசிகர்கள் தங்களின் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே அந்த வீடியோ…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.