Advertisment

உதயநிதியின் மாமன்னன் படத்திற்கு சிக்கல்: ஐகோர்ட்டில் புதிய வழக்கு

'ஏஞ்சல்' படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
maamannan

'மாமன்னன்' படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாக இருக்கும் 'மாமன்னன்' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குனர் கே.எஸ்.அதியமான், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் உழைப்பில் 'ஏஞ்சல்' என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

'ஏஞ்சல்' படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது கடைசி படம் இது என்று கூறியுள்ளார்.

'ஏஞ்சல்' படத்துக்காக இதுவரை ரூ.13 கோடி செலவிடப்பட்டது, இந்த படத்திற்காக எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார்; 'ஏஞ்சல்' படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, 'ஏஞ்சல்' படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து, ரூ.25 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment