பேண்ட் கழற்று, வேட்டி கட்டி ஜிப்பா போடு, நீதான் வாத்தியார் போ... பாக்யராஜை ஹீரோ ஆக்கிய பாரதிராஜா ஓபன் டாக்!

நடிகர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பாக்கியராஜை ஹீரோவாக்கியது குறித்து இயக்குநர் பாரதிராஜா மனம் திறந்துள்ளார்.

நடிகர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட பாக்கியராஜை ஹீரோவாக்கியது குறித்து இயக்குநர் பாரதிராஜா மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
bhagyaraja

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் திரைத்துறையின் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கிறார். இயக்குநர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட பாரதி ராஜா கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று இவர் குரலில் ஒலிக்கும் டயலாக்கை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்து கிடப்பார்கள்.

Advertisment

இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்தது. தொடர்ந்து, ’கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ’அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘மண்வாசனை’, ‘தாஜ்மஹால்’ உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களுக்க வசப்படாத ரசிகர்களும் இல்லை புகழும் இல்லை. அப்படி இயக்குநராக கொடிக்கட்டி பறந்தவர் பாரதிராஜா. தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, பாக்கியராஜை எப்படி நடிகராக்கினேன் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "16 வயதினிலே படம் எடுக்கும் போது ஒரு சீசனை பாக்கியராஜிடம் எழுத சொன்னேன். அப்படியே எழுதி கொடுத்தார். முதலில் பாக்யராஜை நடிகனாக்குவதற்கே யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ’புதிய வார்ப்புகள்’ படத்தின் போது ஒரு கண்ணாடி கொடுத்து ஜிப்பா, வேஷ்டியெல்லாம் கொடுத்து போட சொன்னேன். இவன் தான் வாத்தியார் என்றேன். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யராஜ், சார் இது உங்க சொந்த படம் என்றார். எல்லோரும் என்ன பாக்யராஜ் இப்படி இருக்காரு என்று சொன்னார்கள். நான் சொன்னேன் தினமும் ஒரு உதவி இயக்குநர் கடைக்கு சென்று இரண்டு பீர் பாட்டல் வாங்கிக் கொண்டு வந்து பாக்யராஜிடம் கொடுங்கள். காலையில் சாப்பாட்டிற்கு முன்பு ஒரு பீர்பாட்டில் இரவு ஒரு பீர்பாட்டில் கொடுங்கள் என்றேன். 

Advertisment
Advertisements

’16 வயதினிலே’ திரைப்படத்தை முழுமையாக பார்த்த பின் அந்த படம் ஓடுமா, ஓடாத என்ற எண்ணம் வந்தது. ஏனென்றால் எல்லோரும் என்னை கிண்டல் செய்தார்கள். கோமணம் கட்டிக் கொண்டு படம் எடுக்கிறீர்கள் என்று. அப்போது நினைத்தேன் ‘16 வயதினிலே’ படம் ஓடவில்லை என்றால் ஊருக்கு சென்றுவிடுவோம் என்று. ஆனால், அந்த படம் ஒரே இரவில் பாப்புலர் ஆகிவிட்டது. இயக்குநர் கே.பாலச்சந்திரரிடம் இருந்து தான் முதல் வாழ்த்து கடிதம் வந்தது” என்றார்.

Bharathiraja Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: