Advertisment

விஜய் வாங்கிய முதல் சம்பளம்... அதுவும் இந்த நடிகர் கையால்... எஸ்.ஏ.சி. சொன்ன ரகசியம்

நடிகர் விஜய் நடித்த முதல் படம் அவர் முதலில் வாங்கிய சம்பளம் மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் நட்பு

author-image
WebDesk
New Update
விஜய் வாங்கிய முதல் சம்பளம்... அதுவும் இந்த நடிகர் கையால்... எஸ்.ஏ.சி. சொன்ன ரகசியம்

90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.

Advertisment

இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் விஜய் நடித்த முதல் படம் அவர் முதலில் வாங்கிய சம்பளம் மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் நட்பு உள்ளிட்ட தகவல்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த வீடியோவில் பேசும் அவர், நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரிப்பு நிறுவனத்திற்காக வெற்றி படம் பண்ணினேன். இந்த படத்தில் தான் விஜய் அறிமுகம். இளம் வயது விஜயகாந்த் வேடத்தில் நடித்த அவர், கோர்ட் காட்சியில், ஒருமுறை டைலாக் சொன்னேன். கூண்டில் ஏறி ஒருமுறை பேசி கட்டினேன். அவ்வளவுதான். பொதுவாக ஷூட்டிங் பார்க்க எப்பவாது வரும் பி.எஸ்.வீரப்பா அன்று ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார்.

விஜய் தனது டைலாக்கை கூண்டில் நின்று பேசி முடிக்கிறார். அப்போது பி.எஸ்.வீரப்பா திடீரென ஓடி வந்து விஜயை தூக்கி முத்தம் கொடுத்துவிட்டு அவர் பாக்கெட்டில் இருந்து ரூ500 எடுத்து கொடுக்கிறார். இதுதான் விஜய் வாங்கிய முதல் சம்பளம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றுதான் படத்திற்கு வெற்றி என்று தலைப்பு வைத்தோம்.

இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்தோம். அங்கு படம் சூப்பர் ஹிட். இந்த படத்தின் வெற்றி விழா செகந்தராபாத்தில் நடைபெற்றது. அப்போது சிரஞ்சீவி 4 வெற்றியை கொடுத்துவிட்டீர்கள் அதனால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசாமல் தெலுங்கில் பேசுங்கள் என்று கூறினார். தெலுங்கில் பேசினால் எனக்கு புரியும். ஆனால் பேச தெரியாது. இதுந்தாலும் அங்கு போய் நான் எப்படி பேசினேன் என்றே தெரியவில்லை பேசி முடித்தவுடன் அனைவரும் கை தட்டினார்கள். சிரஞ்சீவி என்னை பாராட்டினார் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

S A Chandrasekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment