/tamil-ie/media/media_files/uploads/2017/11/Naachiyar-Movie-First-Look.jpg)
‘நாச்சியார்’ படத்தின் டீஸர் பற்றி இப்போது பேசவேண்டாம் என ஜோதிகா தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ‘பி ஸ்டுடியோஸ்’ மூலம் பாலாவே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதன் டீஸரை, சமீபத்தில் வெளியிட்டார் சூர்யா.
அந்த டீஸரின் இறுதியில், போலீஸாக நடித்துள்ள ஜோதிகா ஒருவரைப் பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டுவது போல் அமைந்துள்ளது. இதற்கு, ஏராளமான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ‘ஒரு பெண்ணே எப்படி அந்த வார்த்தையைப் பேசலாம்’ என பெண்கள் கூட ஜோதிகாவிற்கு எதிராக உள்ளனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனியார் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்டார் ஜோதிகா. அவருடன் நடிகர்கள் பிரபு, துல்கர் சல்மான், நடிகை பிந்து மாதவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஜோதிகாவிடம் ‘நாச்சியார்’ டீஸர் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜோதிகா, ‘அதைப் பற்றி இங்கே வேணாங்க. படம் பார்க்கும்போது உங்களுக்கு எல்லாம் தெரியவரும். டீஸர் பற்றி இப்போது பேசவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.