Advertisment

ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்ற ஹ்ரித்திக் ரோஷன்

தான் நடித்துவரும் ‘சூப்பர் 30’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

author-image
cauveri manickam
Feb 21, 2018 16:04 IST
hrithik roshan

தான் நடித்துவரும் ‘சூப்பர் 30’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகிவரும் ஹிந்திப் படம் ‘சூப்பர் 30’. விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். இன்னும் சொல்லப்போனால் அவருடைய சூப்பர் 30 புராஜெக்ட்டை மையமாக வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் 22ஆம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக ஆசிரியராக நடிக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன். இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சைக்கிளில் சென்று தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. யார் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாதபடி பழைய ஆடைகளுடன் அச்சு அசல் அப்பளம் விற்பவரைப் போலவே இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன்.

#Bollywood #Hrithik Roshan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment